உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திசைமாறும் எண்ணத்தில் தே.மு.தி.க., ராஜ்யசபா சீட் மறுப்பால் பிரேமலதா கடுகடுப்பு

திசைமாறும் எண்ணத்தில் தே.மு.தி.க., ராஜ்யசபா சீட் மறுப்பால் பிரேமலதா கடுகடுப்பு

'அரை சதவீத ஓட்டு கூட இல்லாத தே.மு.தி.க.,வை எப்படி கூட்டணிக்குள் வைத்திருக்க முடியும்?' என சில மாதங்களுக்கு முன், அ.தி.மு.க., - தி.மு.க., என, இருதரப்பிலும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அலட்சியமாக கருத்து கூறி வந்தனர். ஆனால், 2026 சட்டசபை தேர்தல் நெருங்குவதால், இரு கட்சிகளும் கூட்டணியை வலுப்படுத்துவதில் தீவிரமாக இருக்கின்றன. இதற்காக, சிறிய கட்சிகள் என்றாலும், அவற்றை மரியாதையோடு நடத்துவதற்கு, இருதரப்பிலும் முயன்று வருகின்றனர். இந்நிலையில், ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 19ல் நடக்கவிருக்கிறது. அதில், தி.மு.க.,வுக்கு நான்கு; அ.தி.மு.க.,வுக்கு இரண்டு என்ற எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தேர்வாக வாய்ப்புள்ளது.

2026ல் 'சீட்'

'கடந்த 2024 லோக்சபா தேர்தலின்போது, தங்களுக்கு வாக்குறுதி அளித்தபடி, அ.தி.மு.க., தரப்பு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டும்' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தொடர்ந்து, அ.தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார்.'அப்படி எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை' என, அ.தி.மு.க., தரப்பு சொல்லிக் கொண்டிருந்தது. இது, தே.மு.தி.க.,வை அதிருப்திக்குள்ளாக்கியது. இதனால், தி.மு.க.,வோடு நெருக்கம் காட்டத் துவங்கினர். 'வரும் சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டை தே.மு.தி.க. எடுக்கக்கூடும்' என பதறிய அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கடைசிநேர முயற்சியாக, தே.மு.தி.க., பொருளாளரும், பிரேமலதா தம்பியுமான சுதீஷை அழைத்து பேச்சு நடத்தினார். 'அடுத்து 2026ல் காலியாகும் இடத்தில் இருந்து ஒரு ராஜ்யசபா சீட்டை தே.மு.தி.க.,வுக்கு தருகிறோம்' என்று அ.தி.மு.க., தரப்பில் சொன்னதை, சுதீஷ் ஏற்கவில்லை.இருந்தபோதும், 'அ.தி.மு.க., தரப்பில் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவர்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். கூடவே, வரும் 2026ல் நடக்கவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க.,வுக்கு அ.தி.மு.க., சார்பில் ஒரு சீட் வழங்கப்படும் எனவும்; அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., தொடருகிறது எனவும் அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது, தே.மு.தி.க., தரப்பை கடும் எரிச்சலுக்குள்ளாக்கி இருக்கிறது.

தே.மு.தி.க., மகிழ்ச்சி

இந்த அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விரும்பிய தி.மு.க., தரப்பு, மதுரையில் நடந்த கட்சியின் பொதுக்குழுவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் இயற்றி உள்ளனர். இது, தே.மு.தி.க., தரப்புக்கு ஆறுதல் ஏற்படுத்தி இருப்பதாக அக்கட்சியினரே கூறுகின்றனர். இதையடுத்து, வரும் சட்டசபை தேர்தலுக்கு இரு கட்சிகளும் கூட்டணி சேர வாய்ப்புள்ளது எனவும், தே.மு.தி.க., வட்டாரங்களில் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

தே.மு.தி.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

வாக்குறுதி அளித்தவாறு ராஜ்யசபா சீட் ஒதுக்காமல், தே.மு.தி.க.,வுக்கு அதிர்ச்சி கொடுத்த அ.தி.மு.க.,வினர், 'வரும் சட்டசபை தேர்தலிலும் தே.மு.தி.க.,வுடன் கூட்டணி தொடரும்' என, எந்த தைரியத்தில் கூறுகின்றனர் என்று புரியவில்லை. ஆனால், இன்று வரை எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தே.மு.தி.க.,வின் நிறுவன தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு, தி.மு.க., தன் பொதுக்குழுவில், இரங்கல் தெரிவித்து தீர்மானம் போடுகிறது. அதனால், வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணையலாம் என்ற எண்ணம் மொத்த கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து அதற்கான பேச்சுகள் துவங்கும்.

தி.மு.க.,வுக்கு நன்றி

வரும் 2026ல், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட தே.மு.தி.க.,வுக்கு வாய்ப்பளிக்கப்படும் என, அ.தி.மு.க., சொன்னாலும், அதை தே.மு.தி.க., ஏற்கவில்லை.இதையடுத்தே, கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா, தன் பேட்டியில் தி.மு.க.,வுக்கு நன்றி தெரிவித்ததோடு, அ.தி.மு.க.,வின் ராஜ்யசபா தேர்தல் நிலைப்பாடு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கண்டிப்பாக தருவோம் என்றவர்கள் தரவில்லை

தி.மு.க., பொதுக்குழுவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதற்கு, முதல்வர் ஸ்டாலினுக்கும், தி.மு.க.,வுக்கும் நன்றி. கடந்த 2024 லோக்சபா தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில் ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, எழுத்துப்பூர்வமாக உறுதிசெய்து கையெழுத்திட்டுக் கொடுத்தார். ஒப்பந்தம் செய்தபோது, ஆண்டு குறிப்பிடவில்லை. தற்போது, வரும் 2026ல் ராஜ்யசபா சீட் தருவதாக அ.தி.மு.க., அறிவித்துள்ளது. அவர்கள் கடமையை அவர்கள் ஆற்றியதுபோல், தே.மு.தி.க.,வும் தேர்தலை ஒட்டி தன் கடமையை ஆற்றும். வரும் 2026 ஜன., 9ல், கடலுாரில் எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம்.- பிரேமலதா, பொதுச்செயலர், தே.மு.தி.க., - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Chandrasekaran
ஜூன் 04, 2025 09:28

நடுநிலை கட்சி சார்பற்ற வாக்காளர்கள்தான் தேர்தல் முடிவை தீர்மானிக்கின்றனர் என்பதால் அவர்கள் இம்முறை சரியான முடிவை எடுக்காவிட்டால் மாற்றம் நிகழாது. தேர்தல் ஆணையம் இம்மூறை வாக்குச்சாவடி பக்கமே வராத ஒரு பிரிவிற்கான அரசு சலுகை அனைத்தும் வீலக்கி வெளிநாட்டினர் போல இனி நடத்தப்படுவர் என அறிவிக்க வேண்டும். வாக்குச்செலுத்த தவறுபவர்கள் இந்தியப் பிரஜையாகாவே கருதக்கூடாது.


Gajageswari
ஜூன் 04, 2025 05:38

இந்த நாங்கள் சீட் கொடுத்தாலும்/கொடுக்கவில்லை என்றாலும் அதிமுக உடன் தான் கூட்டு என்ற நிலை நாடு எடுத்து இருக்க வேண்டும். ஜனவரி மாதம் அறிவிப்போம் என்று கூறியதே காரணம். தனது வாயால் கெடுதல்


Bhaskaran
ஜூன் 03, 2025 04:26

ஆக அறிவாலய வாசலில் காவடி எடுக்கும் திருமா காம்ரேட்ஸ் வேல்முருகன் கம்பெனியுடன் கையில் திருவோட்டுடன்கோபாலுக்கு பேச்சு துணையாக மற்றொருவர் சபாஷ்


எஸ் எஸ்
ஜூன் 02, 2025 19:39

பேசாமல் கட்சியை கலைத்து விடுவது அவருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது


S.L.Narasimman
ஜூன் 02, 2025 12:48

இவர்களுக்கு ஒரு ராச்சிய சபா சீட்டு கொடுத்தாலும் திமுகா பக்கம் போக மாட்டார்கள் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. கொடுக்காதது அதிமுகாவிற்கு லாபமே நவிர நட்டமில்லை.


lana
ஜூன் 02, 2025 11:58

இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதனால் விடியல் கட்சி கூட கூட்டணி.


Muralidharan S
ஜூன் 02, 2025 11:26

தேமுதிக கட்சிக்கு விஜயகாந்த் என்ற ஒரு தனி நபருக்காக, அவருடைய செல்வாக்குக்காக சில மக்கள் ஆதரவு பெற்று ஓடிக்கொண்டு இருந்தது.. விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அந்த கட்சி ஒரு செல்லாக்காசு. இதை யாரவது "தான் மிகப்பெரிய தலைவி, தங்கள் கட்சி அமோக மக்கள் ஆதரவு பெற்ற கட்சி என்று பகல்கனவில் மிதக்கும்" அந்த அம்மாவுக்கு எடுத்து சொன்னால் தான் அந்த அம்மாவுக்கு புரியும்.. அடுத்த சட்ட மன்ற தெரிதலில் திமுக / அதிமுக இரண்டுமே மற்றும் மக்களோ இவருக்கோ , இவர் கட்சிக்கோ முக்கியத்துவம் தரமாட்டார்கள். 2026 - இந்த கட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டுவிடும்.


Haja Kuthubdeen
ஜூன் 02, 2025 10:38

தேமுதிக வாக்கு வங்கி 1சதத்திற்கும் குறைவு...இருந்தாலும் கூட அஇஅதிமுக வரும் வருடம் வாய்ப்பு என்று அதிகாரபூர்வமா சொல்லியுள்ளது...பிரேமலதா தம்பியால் ஒரு வருடம் காத்திருக்க முடியாதா???திமுகவெல்லாம் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள ஆர்வம் காட்டாது.


சாமானியன்
ஜூன் 02, 2025 10:12

கமல், சீமான், பாமக , தேமுதிக ஆகிய சில்லரைக்கட்சிகள் மூடுவிழா நடத்தினால் தேவலை. வேஸ்ட்.


S Regunathan Abudhabi UAE
ஜூன் 02, 2025 09:19

தமிழகத்தில் குடும்ப கட்சிகள் ஒழிக்கப்படவேண்டும். ஒரு விழுக்காட்டுக்கு கீழ் உள்ள ஒரு கட்சிக்கு இருக்கும் தெனாவெட்டை பார்.. அப்படியே அதிமுக ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்தாலும் அதை தம்பிக்கோ, மவனுக்கோ தான் இந்த் கொடுங்கோலி கொடுப்பாள். அந்த கட்சிக்கு உழைப்பவர்கள் இதனை உண்ர்ந்து, தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைத்தாலும், அந்த கட்சியில் உண்மை தொண்டன் திமுகவுக்கு ஓட்டு போடவே மாட்டான். அது விஜய்க்கோ, அதிமுகவுக்கோ போய் சேரும். மொத்தத்தில் 2026 தேர்தலுக்கு பிறகு தேமுதிக, மதிமுக, பாமக போன்ற குடும்பக்கட்சிகள் தமிழகத்திலிருந்து ஒட்ட துடைத்தெறியப்படும்.


முக்கிய வீடியோ