உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் கட்டாய வசூல்: தனியார் மருத்துவ கல்லுாரிகள் அடாவடி

ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் கட்டாய வசூல்: தனியார் மருத்துவ கல்லுாரிகள் அடாவடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரிகள், ஆண்டுதோறும், 3 லட்சம் ரூபாய் வரை, மாணவர்களிடம் கட்டாய நன்கொடை வசூலில் ஈடுபடுகின்றன. இதுகுறித்து புகார் அளிக்க பெற்றோரும், நடவடிக்கை எடுக்க அதிகாரிகளும் தயக்கம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில், 26 தனியார் மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இவற்றுக்கு அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவ கல்வி கட்டண நிர்ணய குழு, எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான ஓராண்டு கட்டணத்தை நிர்ணயித்து வருகிறது. இந்தாண்டு மருத்துவ கல்வி கட்டணத்துடன், விடுதி, போக்குவரத்து உள்ளிட்ட கட்டணங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கடந்தாண்டு வரை ஆண்டுக்கு, 13.50 லட்சம் ரூபாயாக இருந்த எம்.பி.பி.எஸ்., படிப்பு கட்டணம், இந்தாண்டு முதல், 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விடுதி கட்டணம், 2.50 லட்சம்; உணவு கட்டணம் 1.35 லட்சம்; போக்குவரத்து கட்டணம் 1.75 லட்சம்; இதர கட்டணம் 3 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு கட்டணம் நிர்ணயித்தாலும், தனியார் கல்லுாரிகள், இந்த கட்டணங்கள் தவிர்த்து, ஆண்டுதோறும், 3 லட்சம் ரூபாய் வரை, நன்கொடையாக பெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரும்பாலான தனியார் மருத்துவ கல்லுாரிகள், அரசில்வாதிகளுக்கு சொந்தமானவை. எனவே, நன்கொடை வசூல் குறித்து புகார் அளித்தால், பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகி விடுமோ என, பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர். அதேபோல, நடவடிக்கை எடுத்தால், தங்களின் பதவிக்கு பாதிப்பு வருமோ என, மருத்துவ கல்வி அதிகாரிகளும் தயக்கம் காட்டுகின்றனர். இது குறித்து பெற்றோர் தரப்பில் கூறியதாவது: தனியார் மருத்துவ கல்லுாரியில், கடந்த ஆண்டு மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., சேர்ந்த போது, 13.50 லட்சம் ரூபாயாக கட்டணம் இருந்தது. அப்போது, கல்வி கட்டணம், விடுதி, போக்குவரத்து கட்டணத்துடன், கூடுதலாக, 3 லட்சம் ரூபாய் பெற்றனர். இதற்கு ரசீது தரவில்லை. இந்த ஆண்டு மருத்துவ கல்வி கட்டணம், 13.90 லட்சம் ரூபாய் கேட்டு பெற்றனர். அத்துடன், 1.50 லட்சம் ரூபாய் விடுதி கட்டணம் செலுத்திய பின், கடந்த ஆண்டை போல், 3 லட்சம் ரூபாயை கேட்டு பெற்றனர். ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அவ்வாறு செலுத்தவில்லை என்றால், எங்களின் பிள்ளைகள் தேர்வு எழுத முடியாத அளவுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றனர். இது குறித்து புகார் அளிக்க ஆர்வம் இருக்கிறது. ஆனால், புகாருக்கு பின், பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியும் எழுகிறது. பெரும்பாலான மருத்துவ கல்லுாரிகள் நன்கொடை வசூலிப்பது அதிகாரிகளுக்கு தெரிகிறது. ஆனால், தடுக்க அஞ்சுகின்றனர். அவர்களே பயப்படும் போது, நாங்கள் எப்படி அடையாளத்துடன் புகார் அளிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Prasanth Kumar
செப் 28, 2025 21:59

கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் டீம்டு யுனிவர்சிட்டி பிரேக்ஃபீ எனும் கட்டணத்தை அடாவாடியாக வசூலித்து மிக கொடூரமான முறையில் மாணவர்களை தேர்வு எழுத விடாமல் இன்டர்ன்ஷிப் அட்டென்ட் பண்ண விடாமல் ஒரு ரவுடியை போல மாணவர்கள் மீது பிரயோகிக்கின்றனர் இதனால் பல மாணவர்களும் பெற்றோர்களும் செய்வதறியாமல் மிக்க துன்பத்தில் உள்ளனர் அவர்களுக்கு விடிவு காலம் எப்போது ஜனநாயக துண்களாகிய நீங்கள் வெளிகொனந்தால் மட்டுமே அவர்கள் தப்பிக்க முடியும் இல்லையென்றால் பல தற்கொலைகள் நடக்கும்


Prasanth Kumar
செப் 28, 2025 21:56

ஜனநாயகத்தின் தூண்களாகிய பத்திரிக்கை ஊடக அன்பர்கள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த அன்பான வணக்கங்கள்.... தமிழ்நாட்டில் பல தனியார் மருத்துவக் கல்லூரியும் மற்றும் தனியார் மருத்துவ நிகழ்நிலைப் பல்கலைக்கழகமும் இயங்கி வருகின்றன இதில் சென்னை ஓஎம்ஆர் இல் இயங்கும் பிரபல தனியார் நிகழ்நிலை மருத்துவ பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது . அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலைக்கு பல்கலைக்கழகம் மனரீதியாகவும் படிப்பை தடை செய்து துன்புறுத்துகிறது... மேனேஜ்மென்ட் கோட்டாவில் ஒவ்வொரு வருடமும் 24 லட்சம் ரூபாய் கல்வி கட்டணமாக வசூலிக்கிறார்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் ஒவ்வொரு வருடமும் 24 லட்சம் ரூபாய் மாணவர்களின் கட்டி படித்துக் கொண்டுள்ளார்கள் .. இந்த சூழ்நிலையில் பணம் பறிக்கும் நோக்கோடு வேண்டுமென்றே மாணவர்களை ஃபெயில் ஆக்கி அதற்கு தேர்வு கட்டணம் இன்றி break fees அல்லது அடிஷனல் டியூஷன் பி எனும் பெயரில் கொள்ளை அடித்துக் கொண்டுள்ளார்கள் சில மாணவர்கள் கல்லூரி கட்டணத்தை அப்பருவத்தில் கட்ட முடியாமல் போனால் அந்த கல்லூரி பருவத்திற்கு 8 லட்சம் ரூபாய் அபராதமாக பிரேக்ஃபி அல்லது அடிஷனல் டியூஷன் பீஸ் எனும் முறையில் மாணவர்களை ஐடி கார்டை பிளாக் செய்தும் தேர்வு எழுத முடியாமல் ஹால் டிக்கெட் பிளாக் செய்தும் துன்புறுத்துகிறார்கள் . மேலும் இன்டெர்ன்ஷிப் மாணவர்களுக்கும் அந்த brakfee அல்லது அடிஷனல் டியூஷன் பீஸ் கட்டாதவர்களை தடை செய்து துன்புறுத்துகிறார்கள் .. இது சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் குழு இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ பல்கலைக்கழகம் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் ஆய்வு செய்து ஒரு ஆய்வறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது பல பல்கலைக்கழகங்கள் வேண்டுமென்றே ஃபெயில் ஆக்கி மாணவர்களிடம் அடிஷனல் டியூஷன் பீஸ் கேட்பது மற்றும் பிற துன்புறுத்தல்களையும் தெரிவித்துள்ளது அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.. ஒவ்வொரு மாணவருக்கும் 20 லட்ச ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாய் brek fee எனும் முறையில் கட்ட சொல்லி துன்புறுத்துகிறது. ஐந்து ஆண்டு கட்டணம் செலுத்தி படித்த பின்னரும் கிட்டத்தட்ட ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் கட்டியும் பணம் பறிக்கும் நோக்கில் இதுபோல் பிரேக்ஃபீ அல்லது அடிஷனல் டியூஷன் பீஸ் எனும் பெயரில் மாணவர்களை தேர்வு எழுத விடாமலும் மற்றும் internship அனுமதிக்காமலும் துன்புறுத்தி அவர்களிடமிருந்து பண வசூலிக்கிறது.. இந்த பிரேக்ஃபீ எனும் NMC ஆல் தடை செய்யப்பட்ட ஒன்றாகும் . மேலும் UGC தடை செய்யப்பட்டுள்ளது மேலும் தமிழ்நாடு கட்டண நிர்ணய குழு கமிட்டியும் தடை செய்துள்ளது இருந்தாலும் மேற்கண்ட பல்கலைக்கழகம் மாணவர்களிடம் கட்டண கொள்ளை நடத்திக் கொண்டுள்ளது... இது சம்பந்தமாக என்எம்சி மற்றும் யுஜிசி போன்ற அமைப்புகளுக்கும் ரிப்போர்ட் செய்தாலும் அதற்குரிய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.. இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சில மாணவர்கள் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.. இந்த பிரச்சனையில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் படிக்கும் மாணவர்களை பலரும் சொல்லல்லாத துன்பங்கள் மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர் ..இப்பிரச்சனையை பத்திரிகை ஊடக அன்பர்கள் ஆய்வு செய்து விசாரித்து உண்மையான தகவல்களை வெளி உலகத்திற்கு கொண்டு வந்தால் பல ஊழல்களும் பல முறைகேடுகளும் வெளி உலகத்திற்கு தெரிய வரும்


Venugopal S
செப் 28, 2025 11:53

நீட் தேர்வு முறையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவக் கல்வி இலவசம் என்று கூப்பாடு போடும் சங்கிகள் எங்கே இருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரவும்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை