உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சேவைத்துறை சார்ந்த வளர்ச்சி: ரகுராம் ராஜன் - ஸ்ரீதர் வேம்பு காரசாரம்

சேவைத்துறை சார்ந்த வளர்ச்சி: ரகுராம் ராஜன் - ஸ்ரீதர் வேம்பு காரசாரம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் எந்த திசையை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதில் புதிய விவாதம் எழுந்துள்ளது. ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் 'சேவை துறை சார்ந்த வளர்ச்சி' என்ற நிலைப்பாட்டை, 'ஜோஹோ' நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சித்துள்ளார்.

உற்பத்தி அவசியம்

சேவை துறையை மட்டுமே முழுமையாக நம்பியிருந்தால், இந்தியா மெக்சிகோவை போல மாறிவிடும் ஆபத்து உள்ளது. மெக்சிகோ உலகளாவிய உற்பத்தி மையமாக இருந்தாலும், அதன் முக்கிய தொழில்நுட்பங்கள், வடிவமைப்பு, அதிக லாபம் அனைத்தும் வெளிநாடுகளுக்கே செல்கின்றன. வெளிநாட்டு பொருட்களின் உதிரிபாகங்களை இங்கு ஒன்றிணைப்பதால் தொழிலாளர்களுக்கு அதிக ஊதியமோ, நாட்டுக்கு அதிக லாபமோ கிடைக்காது. அறிவுசார் சொத்துரிமைகளுடன் கூடிய உற்பத்தியை மேற்கொண்டால் மட்டுமே, இந்தியா தென் கொரியாவை போல உலகளாவிய நிறுவனங்களை உருவாக்கி, மிகப்பெரிய வளர்ச்சியை காண முடியும்.

சேவைகள் துறைக்கு முன்னுரிமை

தற்போது உலக அளவில் இயந்திர மயமாக்கல் தொழில்நுட்பங்கள் அதிகரித்துவிட்டன. மேலும், உற்பத்தி துறையில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால், முன்பு போல ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி துறையில் நாம் வெற்றி பெறுவது கடினம். எனவே, மனித வளம், சேவைத்துறை மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட அறிவு சார்ந்த தொழில்களில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும். இதுவே எதிர்கால வேலைவாய்ப்புக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய ஆதாரமாக விளங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Ramesh Sargam
செப் 06, 2026 20:49

ரகுராம் ராஜன் காங்கிரஸ் கட்சியின் கைக்கூலி.


சண்முகம்
செப் 05, 2026 22:17

youtube, reels, Instagram, facebook போன்ற சேவைகள் மக்களை சோம்பேறிகளாக, சிந்திக்கும் திறன் அற்றவர்களாக ஆக்குகிறது. நாட்டுக்கு என்ன பலன்?


sankaranarayanan
செப் 05, 2026 21:01

ஸ்ரீதர் வேம்பு சொல்வது முற்றிலும் உண்மைதான் அதுதான் நமது இந்தியாவிற்கு இப்போது தேவையானது நமது நாட்டில் நாம் நமது கையால் செய்து உற்பத்தியைப்பெருக்கி அதிக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் அப்போதுதான் உலக வல்லரசுகளுக்கு சமமாக நாம் உட்கார முடியும் நாம் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு அயல் நாடுகளில் வேலை செய்து அங்கே உறபத்தியை பெருக்குகிறோம் அல்லது அயல் நாட்டிலிருந்து சில உதிரி பாக்கங்களை வரவழைத்து இங்கே அவைகளே சேர்க்கிறோம் அதிலே நம்நாட்டிற்கு அதிக லாபம் கிடையாது ஆனால் இங்கேயே உற்பத்தி செய்து இங்கேயே அவைகளை அசெப்பில்செய்து வெளி நாடுகளுக்கு ஏகிற்றுமதி செய்யதால் நமக்கு முழு லாபம் கிடைக்கும் அதைத்தான் ஸ்ரீதர் வேம்புவும் சொல்கிறார் அவர் நல்ல அனுபவசாலி திறமையுள்ளவர்


K V Ramadoss
செப் 05, 2026 20:23

விவசாய விஞானி எம்.எஸ் .சுவாமிநாதனா? பசுமை புரட்சிக்கு வித்திட்டவரா ? ஏன்?


rama adhavan
செப் 05, 2026 18:39

ராகுராம் ராஜன் வெறும் ஒரு ஏட்டு சுரைக்காய், சிதம்பரம் போல். வெறும் படிப்பு மட்டும். ஸ்ரீதர் வேம்பு படிப்பு மற்றும் தொழில் அனுபவம், அரசியல் பின்புலம் இல்லாதவர். விவசாயி வேறு. உலக அனுபவம் அதிகம். ஆகவே ராஜனின் உளறல்களுக்கு இவர் தமிலேயே மண்டையில் சம்மட்டி அடி பதில்கள் இனி தருவார்.


manian
செப் 05, 2026 18:23

Mr Rajan never thinks about real development in india.Typical anti india congress mindset.


Manyam
செப் 05, 2026 16:16

திரு வேம்பு அவர்கள் சொல்வதில் சேவைத்துறையோடு மனித வளம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்டு அறிவு சார்ந்த தொழில்கள் வேலை வாய்ப்புக்கு நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் என்பதை வரவேற்கிறேன். அதே சமயம் அரசாங்கம் எப்படி அவற்றை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் இதில் எங்கு சீர்திருத்தம் தேவை என்பதை விளக்க வேண்டும்.


Iyer
செப் 05, 2026 15:45

ரகுராம் ராஜன் DEEP STATE ன் ஏஜென்ட். தேசவிரோதிகளின் கைக்கூலி. ரகுராம் ராஜன், மன்மோகன், அரவிந்த் சுப்ரமணியன், M. S. ஸ்வாமிநாதன் போன்றவர்களின் கொள்கைகளை பாரதம் புறக்கணிக்கவேண்டும்.


Tetra
செப் 05, 2026 14:13

ரகுராம் ராஜன்ஒரு வெத்து


Rangarajan Cv
செப் 05, 2026 13:53

RR always chooses lesser successful path. He done the same when he was RBI governor. Classic case was credit coop societies were completely unregulated during his regime, which is getting streamlined. As SV said, we can not be unidirectional, which can land us in trouble. Coincident, all the ex rbi directors give more ideas, once they come out of their post???


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை