உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமைச்சர்களில் 47% பேர் கிரிமினல்கள்: ஏ.டி.ஆர்., வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

அமைச்சர்களில் 47% பேர் கிரிமினல்கள்: ஏ.டி.ஆர்., வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நா டு முழுதும் மத்திய - மாநில அமைச்சர்களில் 47 சதவீதம் பேர் மீது கொலை, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உட்பட தீவிரமான கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொடுங்குற்றத்துக்கு ஆளாகி 30 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் இருக்க நேர்ந்தால், பிரதமராக இருந்தாலும் பதவியை பறிக்கும் மசோதா சமீபத்தில் பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o3y9yiyw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குற்றப் பின்னணி இம்மசோதாவுக்கு அரசியல் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு கிரிமினில் குற்றப் பின்னணி கொண்ட அமைச்சர்கள் பற்றி ஆய் வு நடத்தியது. இதற்காக 27 மாநிலங்கள், மூன்று யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் என 643 அமைச்சர்கள் தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை ஆய்வு செய்தது. அதில் 302 அமைச்சர்கள் அதாவது 47 சதவீதம் பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த 302 அமைச்சர்களில் 174 பேர் மீது தீவிரமான கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஏ.டி.ஆர்., அறிக்கை தெரிவிக்கிறது. கட்சி ரீதியாக உள்ள அமைச்சர்களின் குற்றப் பின்னணி குறித்து ஏ.டி.ஆர்., வெளியிட்ட அறிக்கை: பா.ஜ.,வை சேர்ந்த, 336 அமைச்சர்களில் 136 (40 சதவீதம்) பேர் மீது கிரிமினல் குற்றங்கள் உள்ளன. அதில் 88 பேர் (30 சதவீதம்) தீவிர குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர். நான்கு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி அமைச்சர்களில் 45 பேர் (74 சதவீதம்) மீது கிரிமினில் குற்றங்கள் பதிவாகியுள்ளன. அதில் 18 பேர் (30 சதவீதம்) மீது தீவிர குற்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தி.மு.க.,வின், 31 அமைச்சர்களில் 27 பேர் (87 சதவீதம்) மீது கிரிமினல் குற்றங்களும், 14 பேர் மீது தீவிர குற்றவழக்குகளும் பதிவாகியுள்ளன. கிரிமினல் வழக்கு திரிணமுல் காங்., கட்சியின் 40 அமைச்சர்களில் 13 பேர் (33 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகளும், 8 பேர் (20 சதவீதம்) மீது தீவிர குற்ற வழக்குகளும் உள்ளன. தெலுங்கு தேசம் கட்சியில் உள்ள 23 அமைச்சர்களில், 22 பேர் மீது (96 சதவீதம்) கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர்களில் தீவிர குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் 13 பேர் (57 சதவீதம்). ஆம் ஆத்மி அமைச்சர்கள் 16 பேரில், 11 பேர் ( 69 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகளும், ஐந்து பேர் (31 சதவீதம்) மீது தீவிர குற்ற வழக்குகளும் பதிவாகியுள்ளன. தேசிய அளவில் 72 மத்திய அமைச்சர்களில் 29 பேர் (40 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது அவர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரியவந்துள்ளது. மாநிலங்களை பொறுத்தவரை, ஆந்திரா, தமிழ்நாடு, பீஹார், ஒடிஷா, மஹாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா, ஹிமாச்சல், டில்லி மற்றும் புதுச்சேரி என 11 சட்டசபைகளில் உள்ள அமைச்சர்களில் 60 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் முரண்பாடாக, ஹரியானா, ஜம்மு - காஷ்மீர், நாகாலாந்து மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் ஒரு அமைச்சர் மீது கூட கிரிமினல் வழக்குகள் பதிவாகவில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

spr
செப் 05, 2025 17:59

ஹரியானா, ஜம்மு - காஷ்மீர், நாகாலாந்து மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் ஒரு அமைச்சர் மீது கூட கிரிமினல் வழக்குகள் பதிவாகவில்லை. வழக்கு பதிவாக வில்லை என்பதுதான் செய்தி அவர்களில் எவரும் குற்றவாளிகள் அல்ல என்பதல்ல. அரசியலில் நுழைபவர் எவரும் யோக்கியரல்ல அவரவர் செல்வாக்கைப் பொறுத்து சிலர் முன்னரே அறியப்படுகிறார்கள் சிலர் காலம் தாழ்த்தி அறியப்படுகிறார்கள் அவ்வளவே இனி மாநில அரசுகள் ஆளும் கட்சி அமைசர்கள் மீது வழக்குப் பதியலாம் கபில் சிபில், போன்ற பெரிய குற்றவாளிகளுக்காக மட்டுமே வழக்காடுபவர்களுக்கு வாய்ப்பு. இதர அதிகாரிகள் நீதிபதிகள் இவர்களைக் குறித்து விவரம் வருமா


என்றும் இந்தியன்
செப் 05, 2025 16:53

தவறு தவறு. அமைச்சர்களில் 300% பேர் கிரிமினல்கள் அதாவது அமைச்சர்கள் + அவர்கள் இருவரும் சேரும்போது 100% அமைச்சர்கள் + 200%


Venkataraman
செப் 05, 2025 16:48

47 % என்பது மிகவும் குறைவு, 90 % என்பது சரியாக இருக்கும். பெரும்பாலான அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்தலுக்கு முன்பாக எவ்வளவு சொத்து வைத்திருந்தார்கள், அதற்கு பிறகு அவர்களும் அவர்களுடைய உறவினர்களும் எவ்வளவு சேர்த்தார்கள், எப்படி சேர்த்தார்கள் என்ற விவரத்தை வெளியிட்டால் தெரிய வரும். ஆனால் உண்மையான வருமானத்தையும். சொத்து விவரங்களையும் யாரும் தருவதில்லை.


Padmasridharan
செப் 05, 2025 15:40

காக்கி சட்டை போட்ட காவல் துறையிலும் உண்டு சாமி. .


Sridhar
செப் 05, 2025 14:34

ஆனால் இதில் விசேஷம் என்னவென்றால், ஒருவர்கூட கைதாகவில்லை கைதாகி சிறைசென்றால் தானே பதவி விலக வேண்டும்? அப்படியே சிறை சென்றாலும் நீதிமன்றங்கள் பெயில் கொடுத்துவிடும், வெளிவந்த உடனே பதவியில் அமரலாம். இதெல்லாம் அரசியல்ல சகசமப்பா ங்கற நிலையில ஏன் எதிர்கட்சிங்க எதிர்க்கறாங்கன்னு புரியல்ல.


Tamilan
செப் 05, 2025 12:48

எதிர்க்கட்சிகள் 75 வருடத்தில் 60% . பாஜ 10 வருடத்தில் 40% . ராக்கெட் வேகத்தில் கிரிமினலிஸம் வளர்ந்துகொண்டிருக்கிறது . 100 சதவீதம் சுயசார்பை, தலிபான் ஆட்சியை எட்ட இனி ஐந்து வருடங்கள் போதும்


Raj S
செப் 05, 2025 23:42

தமிழன்னு பேர் வெச்சுகிட்டு, எனக்கு மூளை இல்லைனு இப்படி பொது வெளில சொல்லறதை பார்த்தா... அவங்க இப்போ எந்த கட்சினு சொல்லுது... ஆனா அந்த வழக்கு போட்ட போது அவங்க எந்த கட்சில இருந்தாங்க, அப்போ பதவில இருந்தார்களா? பிஜேபி எதிர் கட்சியா இருந்தபோது இந்த தேசவிரோத கான் கிராஸ் கட்சி எவ்வளவு வழக்கு போட்டாங்க? இது மாதிரி நிறைய இருக்கு


Tamilan
செப் 05, 2025 12:46

மோடியும் சாவும் கிரிமினல்களா இல்லையா?


Tamilan
செப் 05, 2025 12:45

பாஜதான் கிரிமினல்களின் முன்னணி. இது அவர்களின் இந்து மதவாத திரையை கிழித்து விட்டு வெளிவந்தது மட்டும். இந்துமதவாத திரைக்குப்பின்னால் நல்லவர்கள் வேடத்தில் இருக்கும் பாஜவினரையும் சேர்த்தால் 99% பாஜவினர் கிரிமினல்கள்தான்.


Sundar R
செப் 05, 2025 09:55

தேசவிரோத செயல்களில் ஈடுபடும் திமுகவை ஏன் தடை செய்யவில்லை? "₹" என்பது மத்திய அரசின் இலச்சினை. அதை "ரூ" என்று திமுகவினர் எழுதியது தண்டனைக்குரிய தேசவிரோத குற்றம். மத்திய அரசிற்கு சொந்தமான ரயில் நிலையங்களுக்குள் திமுக தலைமையின் கட்டளையின் பேரில், திமுகவினர் அத்துமீறி நுழைந்து கறுப்பு பெயிண்ட் அடித்தது, திமுக செய்த தண்டனைக்குரிய குற்றம். அதற்காக மத்திய அரசு, திமுக என்ற கட்சியை ஏன் தடை செய்யவில்லை? திமுகவில் இருக்கும் ஒரு சிலரைத் தவிர, அனைவருமே குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகள் என்பது ஏ.டி.ஆர். என்ற அமைப்பின் மூலம் தற்போது உறுதியாகியுள்ளது. மத்திய அரசிற்கு, இன்னும் என்ன தயக்கம். மத்திய அரசு, திமுக செய்த, செய்யும் தமிழக மக்களுக்கு எதிரான, நம் நாட்டிற்கு எதிரான அனைத்து குற்றங்களையும் கூர்ந்து கவனித்து, 2026 தேர்தலுக்கு முன்பாகவே திமுகவை தகனம் செய்தால் தான், அது நம் பாரத நாட்டில், மாண்புமிகு ஜனாதிபதி முதல் கடைக்கோடியில் வாழும் சாமானியன் வரை, அனைவருக்கும் பாதுகாப்பு. மத்திய அரசு திமுகவை தகனம் செய்தால் தான், மக்களுக்கு நம் நாட்டில், தீமையை அழிக்கவும், தர்மத்தை நிலை நாட்டவும், மோடிஜி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு என்று ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கையை மக்களிடையே காணமுடியும்.


Ramesh Sargam
செப் 05, 2025 09:49

திமுக போன்ற ஒரு சில அரசியல் கட்சிகளில் உறுப்பினர் ஆவதற்கே முக்கியமான தகுதி அவர்கள் மீது காவல்நிலையத்தில் ஒரு சில கிரிமினல் குற்ற வழக்காவது பதிவு செய்யப்பட்டிருக்கவேண்டும். அதிக வழக்கு உள்ளவர்களுக்கு உறுப்பினர் பதவி உடனே கிடைக்கும்.