வாசகர்கள் கருத்துகள் ( 6 )
In our Country Getting a Good Job with good Salary is Very difficult nowdays for Every one ,only if there is Income one can Survive ,Spend and Save for the Future.
உண்மை. முதுமை என்றாலே தனிமை, வெறுமை. எனவே தன் கையே தனக்கு உதவி. தெரிந்த வரை ஒருவரது கடைசி காலத்தில் நண்பர்களே சொந்தங்களை விட வேகமாக உதவுகிறார்கள். சொத்துக்குத் தான் சொந்தங்கள் வருகிறார்கள்.
சரியாக கூறினீர்கள்.
பணத்தைவிட நல்ல சொந்தங்களை சம்பாதிக்க வேண்டும். இது ஓரளவு மட்டுமே நம் கையில். நல்ல சுற்றம் அமைவது முன் செய்த கர்மவினைப்படியே அமையும். வெறும் பணம் மட்டுமே கையில் அல்லது சொத்தாக இருப்பது வயதான காலத்தில் இன்னும் ஆபத்தில் முடியும். விஷம் வைத்து கொல்லவும் பண வெறி பிடித்த உறவினர்கள் தயங்க மாட்டார்கள். அப்பேற்பட்ட சொந்தங்களிடமிருந்து விலகிச் சென்று முடிந்தவரை நல்லோர் சூழ வாழ வேண்டும். கடைசி காலம் நிம்மதியாக அமையும்.
முதுமைக்கான முனேற்பாடு என்பது பணம் சேர்ப்பது ம மட்டும் இல்லை. நமது சமூகத்தில் LKG->UKG->SSLC->Plus two-> Engineering/Medical colleges -> Foreign/ MNC job / Marriage / Kids/ Save Money/Kids college / Their wedding/ retirement வரை பிளான் இருக்கும். ஆனால் retirement இற்கு பிறகு என்ன என்பதை தயார் செய்வதில்லை.
முதுமைக்கான நிதி திட்டமிடல்களை, இளமையிலே துவங்கினால் தான், நாம் வயது முதிர்ந்த பிறகு நமக்கு ஏற்படும் எதிர்பாராத செலவினங்களை சமாளிப்பதோடு, ஒரு சில தறுதலை பிள்ளைகளை (மன்னிக்கவும், ஒரு சில பெற்றோர்களுக்கு பிள்ளைகள் தருதலைகளாக உள்ளனர். ஆகையால் அப்படி குறிப்பிட்டேன்) நம்பி இருக்க தேவையில்லை. பிள்ளைகளை பெற்று அவர்களுக்கு நாம் செய்யவேண்டியவை நல்ல படிப்பு மற்றும் நல்ல அறிவுரைகள், அவ்வளவுதான். அவர்களே நம் தியாகங்களை மதித்து, நாம் வயது முதிர்ந்தவுடன் நமக்கு செய்யவேண்டியதை செய்தால் மிக மிக சந்தோஷம். இல்லையென்றால், அவர்களிடம் இருந்து ஒதுங்கி நாம் சேமித்து வைத்ததில் இருந்து நம் முதுமை காலத்தை ஓட்டவேண்டும். ஏன் இப்படி கூறுகிறேன் என்றால், இந்த காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் முதியோர் இல்லம். அங்கு வசிப்பவர்கள் எல்லாம் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள்.
மேலும் செய்திகள்
போலி வாக்காளர்களை நீக்கினால் ஆட்சிக்கு வரலாம்
4 hour(s) ago | 1