உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆசிரியர்களுக்கு வேண்டும் பணிபாதுகாப்பு சட்டம்: ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி

ஆசிரியர்களுக்கு வேண்டும் பணிபாதுகாப்பு சட்டம்: ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்பு சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி துாக்கியுள்ளன.தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு பள்ளியில் பணியாற்றிய தற்காலிக ஆசிரியை ரமணி பள்ளி வளாகத்திற்குள் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக அரசு பள்ளிகளில் போதிய பாதுகாப்பு கட்டமைப்புகள் இல்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.குறிப்பாக அரசு பள்ளிகளிலும் அடிப்படை பணியாளர்கள் (வாட்ச் மேன், துாய்மை பணியாளர், தோட்டக் காவலாளி, அலுவலக உதவியாளர்) 15 ஆண்டுகளுக்கும் மேலாக நியமிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. அதேநேரம் அரசின் மறைமுக உத்தரவால், ஓய்வு பெற்றோரின் ஆயிரக்கணக்கான அடிப்படை பணியாளர்களின் பணியிடங்கள் அரசிடம் சரண்டர் செய்யப்பட்டு விட்டதாக புகார் எழுந்தள்ளன. குறிப்பாக பள்ளிகளில் சுற்றுச்சுவர் வசதியும், வாட்ச் மேன்கள் நியமிக்கப்பட்டால் பாதுகாப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில் ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்பு சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் மாநில தலைவர் அன்பரசன், பொது செயலாளர் மாரிமுத்து கூறுகையில் 'அனைத்து பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும்' என்றனர்.தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் சண்முகநாதன், 'இன்றைய ஆசிரியர் பணி கத்தி மேல் நடப்பது போன்றுள்ளது. ஆசிரியர்களை கொண்டாட வேண்டிய சமூகம் தாக்குதலில் ஈடுபடுவது வேதனையானது'என தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அனைத்து முன்னேற்ற பேரவை மாநில தலைவர் ஆரோக்கியதாஸ், பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர், மாணவர் அல்லாத பிறர் அனுமதிக்கப்படுவதால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. பெற்றோர் தவிர பிறரை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், 'பணியாற்றும் இடத்தில் ஆசிரியர்களின் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. பாதுகாப்பை உறுதிசெய்யாவிட்டால் போராட்டங்கள் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
நவ 22, 2024 21:18

திமுக அரசிடம் பாதுகாப்பு கேட்பதா...? அவர்கள் கொடுத்துட்டாலும்...


சம்பா
நவ 22, 2024 09:58

இப்ப பேர் கொடி ஓட்டு மட்டும் விடியலுக்கு


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
நவ 22, 2024 18:29

நேத்துதான் டாக்டர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தோம் இன்னைக்கு டீச்சர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கன்னு கேக்கிறீங்க அடுத்து இந்த வக்கீலுங்க எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கன்னு கேக்குறாங்க இத்தனை பேத்துக்கும் பாதுகாப்பு கொடுக்க நாங்க எங்க போறது அதனால யாரையும் எதிர்பாக்காம அவுங்கவுங்க உயிரை அவங்கதான் பாதுகாத்துக்கிடணும் சும்மா தொல்லை பண்ணக் கூடாது.


பேசும் தமிழன்
நவ 22, 2024 07:55

இரண்டு பேரும் காதல் என்ற பெயரில் ஊர் சுற்றி விட்டு.... இப்போது அரசு பணி கிடைத்தவுடன்.... கழற்றி விட நினைத்து இருக்கிறார்கள்..... அது சரியா ???... அவன் செய்த குற்றத்துக்காக அவனுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்.. பித்தலாட்டம் செய்த அந்த பெண்ணின் குடும்பத்துக்கு ???


சமீபத்திய செய்தி