உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆதவ் அர்ஜுனாவுக்கு கருத்து சொல்லும் உரிமை உண்டு என்கிறார் திருமாவளவன்

ஆதவ் அர்ஜுனாவுக்கு கருத்து சொல்லும் உரிமை உண்டு என்கிறார் திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

''அமைச்சர் உதயநிதியை விமர்சித்த, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து, கட்சியின் உயர்நிலை குழுவில் விவாதிக்கப்படும்,'' என்கிறார் அக்கட்சித் தலைவர் திருமாவளவன்.தனியார் தொலைக்காட்சிக்கு ஆதவ் அர்ஜுனா அளித்த பேட்டியில், 'நான்கு ஆண்டுகளுக்கு முன் சினிமா துறையிலிருந்து, அரசியலுக்கு வந்தவர்களே துணை முதல்வராகும்போது, 40 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட திருமாவளவன் துணை முதல்வர் ஆகக் கூடாதா' என்றார்.

முற்று பெறவில்லை

அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆதவ் அர்ஜுனா அளித்த பேட்டி, தி.மு.க., மேலிடத்திற்கு அதிர்ச்சி அளித்தது.உதயநிதியை விமர்சித்த ஆதவ் அர்ஜுனா மீது, திருமாவளவன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தி.மு.க., துணை பொதுச்செயலர் ஆ.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் அளித்த பேட்டி:

தி.மு.க.,வுக்கும், வி.சி.,க்கும் இடையே எந்த சலசலப்பும் இல்லை: எந்த விரிசலும் இல்லை. அப்படி விரிசல் உருவாக வாய்ப்பும் இல்லை. என் சமூக வலைதள பக்கத்தில் பதிவான ஒரு சிறிய வீடியோவில் இருந்த, 'ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு' என்ற கருத்து மீண்டும் வெளியாகி, பரபரப்பான விவாதத்திற்கு வித்திட்டிருக்கிறது. அந்த விவாதம், சாதாரணமாக முற்று பெறவில்லை; மேலும் மேலும் விவாதங்களுக்கு இடமளித்து, அது சர்ச்சைக்குரிய கருத்தாக்கப்பட்டு விட்டது.இந்த நிகழ்வால் தி.மு.க.,வுக்கும், வி.சி.,க்கும் இடையில் எந்த சிக்கலும் எழாது; எழுவதற்கும் வாய்ப்பு இல்லை. தி.மு.க., கூட்டணி உறவில் எந்த நெருடலும் இல்லை.

தனிநபருக்கு உரிமை

தி.மு.க., பவள விழாவில் பங்கேற்க, முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்; நாங்கள் பங்கேற்கிறோம். வரும் 2026ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தல் மட்டுமின்றி, 2029 லோக்சபா தேர்தலையும் கருத்தில் வைத்து, கட்சி நலன், மக்கள் நலன் சார்ந்து கூட்டணியை வி.சி., முடிவு செய்யும்.ஒவ்வொரு தனி நபருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. கட்சியில் இருக்கும் ஒவ்வொரு தனி நபரும், அவரவர் கருத்துக்களை சொன்னாலும், அந்த கருத்துக்கள் மீது இறுதி முடிவெடுக்க வேண்டியது கட்சித் தலைமை தான்.கட்சித் தலைமை எடுக்கும் எந்த முடிவுக்கும், கட்சித் தொண்டர்கள் அனைவரும் கட்டுப்படுவர். ஆதவ் அர்ஜுனா கூட, 'கூட்டணி தொடர்பான முடிவை தலைமை எடுக்கும்; அதில் நான் தலையிட மாட்டேன்' என்றே சொல்லி இருக்கிறார்.கட்சி, கூட்டணி ஆகியவற்றிற்கு எந்த சேதமும் இல்லாமல் முடிவெடுக்கக்கூடிய பொறுப்பு எனக்கு உள்ளது. ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்து தொடர்பாக, கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்போம்.இது உட்கட்சி பிரச்னை என்பதால், பொதுச்செயலர்கள், துணை பொதுச்செயலர்கள் என, உயர்நிலை குழுவில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகளுடன் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளேன். மீண்டும் நாங்கள் கலந்து பேசி, அது தொடர்பான முடிவுகளை எடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

சமூக நீதிக்கு இலக்கணம் ஜெயலலிதா!

சமூக நீதி குறித்து, தி.மு.க.,வின் துணை பொதுச்செயலர் ஆ.ராஜா பேசியிருக்கிறார். பெரம்பலுார் தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆ.ராஜா, மறு சீரமைப்பில் அத்தொகுதி பொதுத் தொகுதியான பின், அங்கேயே போட்டியிடாமல் தனித் தொகுதியான நீலகிரி லோக்சபா தொகுதிக்கு ஓடியது ஏன்? கட்சித் தலைமையும், தலித் என்பதால் தானே, அவரை அங்கு விரட்டியது. தி.மு.க., தலைமையின் அந்த முடிவை எதிர்த்து ஆ.ராஜா போராடாதது ஏன்? ஆக, தி.மு.க.,வின் சமூக நீதி, சம நீதி என்ற போலி வார்த்தைகளை, ராஜா மட்டுமல்ல; அக்கட்சியில் இருக்கும் ஒவ்வொரு தலித்களும் உணர வேண்டும். அதே நேரம், பா.ம.க.,விலிருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைந்த தலித் எழில்மலையை, பொதுத் தொகுதியான திருச்சியில் நிறுத்தி வெற்றி பெற வைத்தவர் ஜெயலலிதா. அவர் சமூக நீதிக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்.- ஆதவ் அர்ஜுனா, துணை பொதுச்செயலர், வி.சி., - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Jagan (Proud Sangi)
செப் 26, 2024 18:55

விஜய் , திருமா , காங்ரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளுடன் சீமானும் சேர்ந்தால் வெற்றி நிச்சயம்


sugumar s
செப் 26, 2024 15:07

திருமாவே கிளப்பி விட்டு வெள்ளூட்டம் பாக்கறார்


Shekar
செப் 26, 2024 10:16

கோடி கோடியாய் படியளக்கரவர் இல்லையா? அவருக்கு எல்லா உரிமையும் உண்டு.


karupanasamy
செப் 26, 2024 10:14

இவன் கோபாலபுரத்து ....திகட்டினால் அதிமுக ... அவ்வளவுதான்.


VENKATASUBRAMANIAN
செப் 26, 2024 08:39

நல்ல நாடகம் போடுகிறார்கள். இன்னுமா மக்கள் இவர்களை நம்புகிறார்கள். திமுக விசிக இரண்டும் மக்களை ஏம்ற்றுகின்றனர்.


theruvasagan
செப் 26, 2024 08:37

இப்போதைக்கு மதில் மேல ஏறி நின்னுடுவோம். அப்படியே ரெண்டு பககமும் நூல் விட்டுப் பார்ப்போம். தேர்தல் கிட்டவரும் போது எந்த பக்கம் குதிக்கிறதுன்னு முடிவு பண்ணிக்கலாம். அதுவரைக்கும் தோசையை இப்படியே திருப்பிப் போட்டுகிட்டே இருக்கலாம்.


theruvasagan
செப் 26, 2024 08:31

தோசைக்கு ரெண்டு பக்கம். தோசை வார்க்கணும்னா தோசைக்கல்லில் தோசையை திருப்பி திருப்பி புரட்டிக்கிட்டே இருக்கணும். அப்பதான் நல்லா வேகும். அப்பதான் 2026ல் தின்னுவதற்கு பதமா இருக்கும்.


நிக்கோல்தாம்சன்
செப் 26, 2024 05:53

ஆதவ் அர்ஜுன் படித்தவர் போன்று யோசித்து பேசுகிறார் , வரவேற்கிறேன்


தி.ச.திருமலை முருகன்
செப் 26, 2024 05:37

1999 ல் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தலீத் எழில்மலை திரு. இரங்கராசன் குமாரமங்கலம் (BJP) பிறகு இடைத்தேர்தலில் போட்டியிட்டு 13,000 வாக்கில் வெற்றி பெற்றார். ஆனால் அதற்கு முன்பே 1996 ல் திமுக சார்பில் தலீத் திரு C.T. தண்டபாணி சுமார் 40,000 விக்குகளில் காங்கிரஸை வென்றார் பொதுத் தொகுதியான கோவை மேற்கில். அதிலும் திமுகதான் முதல்


SUBBU,MADURAI
செப் 26, 2024 05:26

அவரை அப்படிச் சொல்லச் சொல்லி தூண்டியதே திருமாவளவன்தான்னு அனைவரும் அறிந்ததுதான். இங்கிட்டு அப்படி சொல்லிட்டு அங்கிட்டு தன் மற்ற அல்லக்கைகளான ரவிக்குமார் வன்னியரசு போன்றவர்களை விட்டு திமுகவிற்கு ஜால்ரா தட்ட சொல்வது திருமாவின் இந்த இரட்டை வேடம் சீக்கிரம் கலையப் போகிறது.


நிக்கோல்தாம்சன்
செப் 27, 2024 10:24

அப்படியும் இருக்குமா ?