உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அலைபேசியில் பேசவே அலறும் போலீசார்; வரிசைகட்டி வரும் வீடியோக்களால் பீதி

அலைபேசியில் பேசவே அலறும் போலீசார்; வரிசைகட்டி வரும் வீடியோக்களால் பீதி

திருப்புவனம்: தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அஜித்குமார் கொலை வழக்கை அடுத்து போலீசார் விசாரணைக்கு செல்வது மற்றும் அலைபேசி பயன்பாட்டை தவிர்த்து வருகின்றனர். அடுத்தடுத்து பழைய சம்பவ வீடியோக்கள் வெளியவதால் போலீசார் பீதியில் உள்ளனர்.திருட்டு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற வாலிபர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன், பிரபு, ஆனந்த், ஆகிய போலீசாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், டிரைவர் ராமச்சந்திரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எஸ்.பி., ஆஷிஷ்ராவத் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட ஐந்து போலீசார், டி.எஸ்.பி.,எஸ்.பி., புகார்தாரர் நிகிதா உள்ளிட்டோர் யார் யாரிடம் பேசினார்கள், இச்சம்பவத்திற்கு நெருக்கடி கொடுத்தது யார் என விசாரணை நடந்து வருகிறது.இவர்கள் பயன்படுத்திய அலைபேசி பதிவுகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. போலீசாரை பொருத்தமட்டிலும், காவல்துறை சார்பாக வழங்கப்பட்ட சிம்கார்டு, சொந்த பயன்பாட்டிற்கு ஒரு சிம்கார்டு, உறவினர்களுக்கு ஒரு சிம்கார்டு என மூன்று எண்கள் பயன்படுத்துவார்கள், உயரதிகாரிகள் நான்கு அலைபேசி எண் கூட பயன்பாட்டில் வைத்திருப்பது வழக்கம்.இவை அனைத்தை பற்றிய தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூலை 8) உயர்நீதிமன்றத்தில் அவை சமர்ப்பிக்கப்படுகின்றன. அலைபேசி பதிவுகள் சமர்ப்பிக்கப்பட உள்ளதால் மாவட்டத்தில் எந்த போலீசாரும் அலைபேசியை சரிவர பயன்படுத்துவதில்லை. வழக்கு தொடர்பாக யார் போன் செய்தாலும் நேரில் வந்து கேட்டு கொள்ளுங்கள் என பதிலளிக்கின்றனர்.யார் போன் செய்தாலும் போலீசார் பீதியுடனேயே உள்ளனர். புகார் கொடுத்தவர்களிடம் நேரில் வந்து தெரிந்து கொள்ளுமாறும், எதிர் தரப்பிற்கும் முறையாக சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகவும் சொல்கின்றனர்.பழைய சம்பவங்கள், பதிவுகள், அதன்மீதான நடவடிக்கைகள் என வரிசைகட்டி வெளியாகி வருவதால் போலீஸ் தரப்பில் ஒருவித பீதி நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RADHAKRISHNAN
ஜூலை 11, 2025 11:52

எந்த வழக்குகளிலும் எவரையும் அடிக்காதீர்கள், குற்றம் கண்டுபிடிக்கவில்லை என்றால் ஒன்றும் ஆகப்போவதில்லை, வீனாக பாதிப்பது நீங்கள்தான், ஒரு வழக்கு கண்டுபிடிக்முடியவில்லை என்றால் உங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை எவன்வீட்டில் எலவு விழுந்தால் உங்களுக்கென்ன வெட்டியான்வேலையை சரியகா பார்க்கவேண்டியதுதானே, சட்டத்தை மக்களே எடுத்துக்கொ்ளவார்கள்,


BalaG
ஜூலை 08, 2025 23:57

போலீசுக்கு பொது மக்களை அடிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும். போலீஸ் மீது உள்ள நம்பிக்கையில்தான் நாட்டின் பிரதமருக்கு கூட கொடுக்காத அடிக்கும் உரிமையை போலீசுக்கு வழங்கி உள்ளது சட்டம். எப்போ ஒழுங்காக விசாரிக்கும், சட்டத்துக்கு புறம்பாக ஈகோவின் உச்சத்தில் நடந்து கொள்கிறார்களோ இனிமேல் அந்த உரிமையை ரத்து செய்ய வேண்டும். அப்படி குற்றவாளியை அடிக்க வேண்டுமானால் கோர்ட் ஒப்புதல் கொடுத்த பின்னரே மேலே கை வைக்க வேண்டும் என்று மிக கடுமையான சட்டம் வர வேண்டும்


Jagan (Proud Sangi )
ஜூலை 08, 2025 19:04

இவர்களுக்கு இது தேவை தான். எதுக்கெடுத்தாலும் அடிப்பது. வயதானவர்கள் என்று கூட பார்க்காமல் வாடா போடா என்று ஒருமையில் பேசுவது, ஜாதி பெயரை சொல்லி வசை பாடுவது என ஒரு ரவுடி கூட்டமாக தான் இப்ப போலீஸ் இருக்கு. எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு வேலையில்லா பட்டதாரிகளை நியமிக்கலாம்.


SP
ஜூலை 08, 2025 14:08

நேர்மையாக செயல்படுபவர்களுக்கு இந்த பயம் தேவையில்லாதது


ديفيد رافائيل
ஜூலை 08, 2025 09:41

Police காரங்க ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிங்களுக்கு பணிந்து போகாமல் தன்னுடைய பதவியை நேர்மையான முறையில் பணியாற்றினால் எதுக்காக இந்த மாதிரி பயப்படனும்.


Kalyanaraman
ஜூலை 08, 2025 08:19

கடும் தண்டனை அற்ற, ஆண்மையற்ற, கையாலாகாத நமது சட்டங்களே அனைத்து அவலங்களுக்கும் மிக முக்கிய காரணம்.


முக்கிய வீடியோ