உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்?

அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'கா ங்கிரசை மத்தியில் மீண்டும் ஆட்சியில் அமர வைக்க, சரியான தலைவர் ராகுல் அல்ல பிரியங்கா' என்ற பேச்சு, மீண்டும் காங்., தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே எழ ஆரம்பித்து விட்டது. இதற்கு காரணம், சமீபத்தில் பிரதமர் வீட்டு முன், 'நீட்' தொடர்பாக நடந்த போராட்டம்.பாதுகாப்பு நிறைந்த பிரதமர் வீட்டு முன், திடீரென காங்., தலைவர்கள் தெருவில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். 'நீட்' வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டம் தான் அது. இதில், திடீரென சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார் எம்.பி., பிரியங்கா. இது, டில்லி போலீசை அதிர வைத்து விட்டது. பின், அவரை கைது செய்து வண்டியில் ஏற்ற முடியாமல் திண்டாடியது போலீஸ்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2edl7iqo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒரு பக்கம், பெண் போலீசார் பிரியங்காவை பஸ்சுக்குள் இழுக்க, அடுத்த பக்கம், காங்., பெண் தொண்டர்கள் வெளியே இழுக்க, பிரியங்காவின் ஒரு கால் தரையிலும், இன்னொரு கால் பேருந்திலும் இருந்ததால், வண்டியை எடுக்க முடியாமல் டிரைவர் மிகவும் திண்டாடினார். ஒரு வழியாக, அவரை கைது செய்து வண்டியில் அழைத்து சென்றனர். பின், விடுவிக்கப்பட்டார்.இந்த போராட்டத் தால், பிரியங்காவின் மவுசு கூடிவிட்டது. 'எதையும் தைரியமாக கையாளுகிறார்; எது குறித்தும் கவலைப்படுவதில்லை. பார்லி.,யிலும் ராகுலை விட நன்றாக செயல்படுகிறார்; பேசுகிறார். பா.ஜ.,வை எதிர்கொள்ள சரியானவர், காங்கிரசின் நம்பிக்கை நட்சத்திரம், பிரியங்கா தான்' என, தொண்டர்களி டையே பேச்சு அடிபடுகிறது.ஆனால், சோனியாவோ, ராகுலை முன்னிறுத்த ஆசைப்பட்டு, அதையே செய்து வருகிறார். ராகுல் இருக்கும் வரை, பா.ஜ., எது குறித்தும் கவலைப்பட தேவையில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

sankaranarayanan
ஆக 03, 2026 00:56

இப்போதுதான் தமிழகத்தில் திராவிட கட்சிகளின் உரிமையாளர்கள் அப்பா பிள்ளை பேரன் - மனைவி என்ற எல்லாரும் கட்சியில் துச்சமாகவிட்டார்கள் ஆட்சியை இழந்து விட்டார்கள் இனி புதிய கட்சிகள்தான் எல்லா இடங்களிலும் தோன்றும் புதிய அரசியவாதிகள்தான் ஆட்சியாளர்களாக இனி வருவார்கள் இது இந்தியாவிலே ஒவ்வொரு மாநிலத்திலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன முதலில் மஹாராஷ்டிராவில், ஆயிற்று அதன் பிறகு பிஹாரில் , மேற்குவங்கத்தில் காஷ்மீரில் ஆந்திராவில் கர்நாடகாவில் இப்போது கேரளாவிலும் தமிழகத்திலும் பரம்பரை ஆட்சி முடிவு பெற்றது.இனி அவர்கள் ஜெமத்திற்கும் ஆட்சிக்கு திரும்ப முடியாது சூழ்நிலை மாறிவிட்டது அவர்களும் தங்களை அதற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளவேண்டும் இதற்குத்தான் அரசியல் மாற்றம் என்று பெயர் அதேபோன்று காங்கிரசுக்கட்சியிலும் அம்மா பிள்ளை பொண்ணு எல்லாமே மாற்றம் காணப்படும் இனி இவர்கள் ஜென்மத்திற்கும் ஆட்சிக்கு வரவே முடியாது. அரசியலை விட்டே ஒதுங்கினால் நல்லது,இல்லையேல் ஆங்காங்கே அடிபட்டு ஒன்றுமே இலாதவர்களாகிவிடுவார்கள்.இதுதான் இவர்களின் அரசியல் எதிர்காலம்.


பேசும் தமிழன்
ஆக 02, 2026 22:04

என்னம்மா.... பாராளுமன்ற வரும் போது... கைப்பை கொண்டு வரவில்லையா ?


பேசும் தமிழன்
ஆக 02, 2026 22:02

யாராவது ஒரு எடுபிடி அவர்களுக்கு கிடைப்பார்கள்.... உப்புக்கு சப்பாணியாக.... பெயருக்கு கட்சி தலைவர் என்ற பெயரில் இருப்பார்.


Santhakumar Srinivasalu
ஆக 02, 2026 20:41

இரண்டு தலைவர்க்கு தகுதி இல்லாதவர்?


Ramesh Sargam
ஆக 02, 2026 20:35

போராட்டம் என்கிற பெயரில் வீதியில் படுத்து புரண்டவர்களெல்லாம் தலைவர், தலைவி என்றால், பல ஊர்களில் பொழுது சாய்ந்தால், குடித்து விட்டு வீதியில் புரண்டு அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவனும் சிறந்த போராட்டக்காரனே. அவனுக்கும் அடுத்த தலைவர் பதவி கொடுக்க வேண்டும்.


ராஜன்
ஆக 02, 2026 19:54

பிரியங்கா காந்தி ஒரு வெட்டிப் பந்தா பேர்வழி எதற்கு கட்சித் தலைவர் பதவி


பேசும் தமிழன்
ஆக 02, 2026 19:26

ராகுல் தான் பிஜேபி கட்சியின் பிரசார பீரங்கி..... அவர் இருக்கும் வரை.... பிஜெபி கட்சிக்கு endhs பிரச்சினையும் இல்லை.... ராகுல் நாட்டுக்கு எதிராக பேச பேச.... மக்கள் கட்சியை விரட்டி அடித்து விடுகிறார்கள்.


வில்லிபுத்தூரான்
ஆக 02, 2026 17:43

ஃபெரோஸ் கான் வாரிசுகள் இருக்கும் வரை காங்.உருப்படாது


ஆரூர் ரங்
ஆக 02, 2026 15:44

ராகுல் தொடர்வது நல்லது. பிஜெபி க்கு.


ஆரூர் ரங்
ஆக 02, 2026 15:43

..க்கு பட்டுக் குஞ்சம் யாரா இருந்தா என்ன?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை