உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கரூரில் அழுதது ஏன்: அமைச்சர் மகேஷ் பதில்

கரூரில் அழுதது ஏன்: அமைச்சர் மகேஷ் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ''முதலில் நாம் மனிதர்கள்; ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதன், தன்னை மனிதனாக நினைக்க மறந்து விட்டான்,'' என, கரூரில் தான் அழுததை விமர்சனம் செய்தவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பதிலளித்துள்ளார். மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் 'தமிழ் முழக்கம்' மேடைப்பேச்சு, ஆளுமைத்திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து, அமைச்சர் மகேஷ் பேசியதாவது: நமக்கான வாழ்வின் பல்வேறு கருத்துகளை திருக்குறளில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அரசியல் என்றாலே நச்சு; நச்சு குணம் கொண்டவன் தான் அரசியல்வாதி என்ற பேச்சு உண்டு. நம்மை சுற்றிலும் அறிவார்ந்த, ஆற்றல்மிக்க அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். புத்தகம் படிப்பதைத் தாண்டி பேச்சுக்கலையை வளர்க்க நகைச்சுவை திறன் அவசியம். கிராமத்தில் 'வாயுள்ள பிள்ளை பிழைக்கும்' என்ற பழமொழி உண்டு; ஆனால் வாயுள்ள பிள்ளைக்கு பகுத்தறிவு வந்தால், தன்னோடு சமூகத்தையும் சேர்த்து பிழைக்க வைக்கும் ஆற்றல் வரும். இவ்வாறு அவர் பேசினார். விழாவிற்கு பின் அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: கரூரில் நெரிசலில் 41 பேர் இறந்தனர். சோக உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டேன். உடனே, சமூக ஊடகங்களில் என்னை வைத்து ஏராளமான கேலி, விமர்சனம் செய்தனர். அறிவு அதிகமாகி, உணர்ச்சிகள் குன்றியிருந்தால், ஒவ்வொரு மனிதனும் மரத்திற்கு சமம். உணர்ச்சி அதிகமாகி, அறிவு குன்றியிருந்தால் விலங்கிற்கு சமம் என வள்ளுவர் கூறியுள்ளார். முதலில் நாம் மனிதர்கள்; ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதன், தன்னை மனிதனாக நினைக்க மறந்து விட்டான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Satish NMoorthy
அக் 24, 2025 00:02

Hey Mahesh You need more training in acting.


Kulandai kannan
அக் 23, 2025 20:00

இந்த நபரின் நீலிக்கண்ணீரின் பின்னணியையும் சி.பிஐ விசாரிக்க வேண்டும்


SUBRAMANIAN P
அக் 23, 2025 17:46

ஆனா நீ சரியா நடிக்கலையே


கல்யாணராமன் சு.
அக் 23, 2025 17:30

அறிவு அதிகமாகி, உணர்ச்சிகள் குன்றியிருந்தால், ஒவ்வொரு மனிதனும் மரத்திற்கு சமம். உணர்ச்சி அதிகமாகி, அறிவு குன்றியிருந்தால் விலங்கிற்கு சமம் என வள்ளுவர் கூறியுள்ளார். ... யாராவது இந்த குறளை சொல்லும்படி கல்வியமைச்சர் மகேசை கேட்டிருக்கணும்


கல்யாணராமன் சு.
அக் 23, 2025 17:28

நம்மை சுற்றிலும் அறிவார்ந்த, ஆற்றல்மிக்க அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். ... இருக்கட்டுமே . .... நீங்க யாரும் அதிலே இல்லே என்பது எங்க எல்லாருக்கும் தெரியும் . ...


Muralidharan S
அக் 23, 2025 16:35

மத்திய புலனாய்வு விசாரணை மற்றும் உச்சநீதி மன்றம் விசாரணை முடிந்து உண்மை வெளிவரட்டும்... அதுவரை காத்து இருப்போம்..


SUBBU,MADURAI
அக் 23, 2025 16:03

இந்த அறிவு திமுக ஆட்சியில் கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து செத்தவர்களுக்கு வர வில்லை வேங்கை வயலில் ... கலந்த போது வரவில்லை ஏன்? சினிமா நடிகனுங்களுக்கு அரசியல் தெரியவில்லை ஆளால் அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக திமுக அரசியல்வாதிகளுக்கு அரசியலும் தெரியும் மிகையில்லாமல் நடிக்கவும் தெரியும் அதற்கு சிறந்த உதாரணம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இவனுக பெயரை பார்த்தாலே எளிதில் நாம் புரிந்து கொள்ளலாம் இவன்களின் பகுத்தறிவு தந்தை ஈ.வே.ராமசாமி அதாவது யுனெஸ்கோ அவார்டு வாங்கியதாக ஓசிச் சோறு க்கிக்கீ ஓசிச்சோறு அறிவிக்கப் பட்ட அவார்டு பொய் என்று எப்படி சிலரால் நிரூபிக்கப் பட்டதோ அதே போல் இதுவும் அப்பட்டமான பொய் என்று நிரூபிக்கப் படும்


sankar
அக் 23, 2025 14:04

யாரோ மண்டபத்துல எழுதியது


surya krishna
அக் 23, 2025 14:02

இந்த கதையை படம் எடுத்தால் ஆஸ்கர் அவார்ட் கிடைக்கும். திராவிட அரசியல் திரைப்படத்திற்கு கதை எழுதி தானே ஆரம்பமானது..... மக்கள் உங்களை நம்பமாட்டார்கள்.


அயோக்கிய திருட்டு திராவிடன்
அக் 23, 2025 13:57

நீ எல்லாம் ஏதேதோ பேச வந்து விட்டாய்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை