உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தனுஷ்கோடி துறைமுக நகரம் மீண்டும் வர்த்தக நகராகுமா

தனுஷ்கோடி துறைமுக நகரம் மீண்டும் வர்த்தக நகராகுமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம் : ஆழிப்பேரலையால் அழிந்து போன தனுஷ்கோடி துறைமுக நகரத்தை மீண்டும் வர்த்தக வளம் கொழிக்கும் நகரமாக மாற்ற வேண்டும். சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்களுக்கும், சுதந்திரத்திற்கு பின் இந்தியர்களுக்கும் பிரதான துறைமுக நகரமாக விளங்கியது தனுஷ்கோடி. விமான சேவைகள் மேம்படாத காலத்தில் பிழைப்புக்காக நாடு விட்டு நாடு சென்ற தொழிலாளர்களுக்கான எளிய கடல் வழித்தடமாகவும் இருந்தது தனுஷ்கோடி.இலங்கையை பொன் விளையும் பூமியாக மாற்றுவதற்காக ஆயிரமாயிரம் இந்தியர்களை இலங்கைக்குக் கொண்டு செல்லத் துணையாக இருந்ததும் இந்த தனுஷ்கோடி துறைமுகம் தான்.

வளமும் அழகும் மிகுந்த தனுஷ்கோடி துறைமுக நகரத்தை ஒரே இரவில் புரட்டி போட்டது ஆழிப்பேரலை. 1964- டிச.23- இரவில் உறங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை ஜல சமாதி ஆக்கியது அந்த கோரப் புயல்.இலங்கை வழியாக வலுப்பெற்று வந்த புயல் துறைமுக நகரமாக விளங்கிய தனுஷ்கோடியை மூழ்கடித்து சின்னாபின்னமாக்கியது. தனுஷ்கோடி ரயில் நிலையம், துறைமுகம், அரசு அலுவலகங்கள், வீடுகள், வியாபார நிறுவனங்களோடு விலைமதிப்பு இல்லாத நூற்றுக்கணக்கான மனித உயிர்கள் கடலுக்குள் போனது. பாம்பனில் இருந்து தனுஷ்கோடிக்கு சென்ற ரயிலையும் கடல் அலை இழுத்துச் சென்றது. இதில் பயணித்த கல்லுாரி மாணவர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் ஆழிப்பேரலைக்குப் பின் மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டது தனுஷ்கோடி. அன்றிலிருந்து மக்கள் நடமாட்டம் இன்றி இருந்து வந்த தனுஷ்கோடி சில ஆண்டுகளுக்குப் பின் சுற்றுலா தலமாக மாறியது. கடந்த சில ஆண்டுகளாக சாலை வசதி, குடிநீர் வசதி, சோலார் மின் விளக்கு வசதி என மெல்ல மெல்ல உயிர்ப்பெற்று வரும் தனுஷ்கோடியில் புயலில் அழிந்தது போக எஞ்சிய நினைவுச்சின்னங்கள் பராமரிக்கப்படாமல் கிடக்கிறது. ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், வெளிநாட்டு, வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் புயலின் எச்சமாக நின்ற கட்டட இடிபாடுகளைத் தனுஷ்கோடிக்கு சென்று பார்த்து வியந்து செல்கின்றனர்.இந்த இடிபாடுகளில் இன்றும் எஞ்சியிருப்பது சர்ச், விநாயகர் கோயில், அஞ்சலக கட்டடம், ரயில் நிலைய கட்டடம் உள்ளிட்ட சில மட்டும் தான். இந்த அடையாள சின்னங்கள் வருடங்கள் செல்ல செல்ல மேலும் சிதிலமடைகின்றன.ரூ.70 கோடிக்கும் மேல் செலவு செய்து தனுஷ்கோடிக்கு சாலை அமைத்துள்ளது மத்திய அரசு. அதே நேரத்தில் தனுஷ்கோடியில் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் புயல் அடையாளச் சின்னங்களை பாதுகாக்கும் பணிகளில் கவனம் செலுத்தவில்லை. ராமேஸ்வரம் கோயிலையும் தனுஷ்கோடியையும் நம்பி பல நுாறு சிறு வியாபாரிகளும் அவர்களோடு இணைந்த குடும்பத்தினரும் வாழ்வாதாரத்தை நகர்த்தி வருகின்றனர்.எனவே நாட்டின் தென் கடலோர பகுதியான தனுஷ்கோடியை சிறப்பு மிக்க சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். தனுஷ்கோடியில் துறைமுகத்தை மேம்படுத்தி மீண்டும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்டவற்றை துவங்கி அந்த நகரை மீண்டும் வளம் கொழிக்க செய்ய வேண்டும் என்பதே அப்பகுதியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அப்புசாமி
ஜன 16, 2024 20:14

இப்பவே நாலடிக்கு ஒரு மீன் ரெஸ்டாரண்ட்.தவிர மனுசன் நடக்க முடியாதபடி ரெண்டுபக்கமும் கடைங்க. விடியல்,ஒன்றியபோலீஸ் ரெண்டும் தூங்குதோ லஞ்சம் வாங்கிட்டு கண்டுக்காமிருக்குதோ தெரியலை.


Loganathan Kuttuva
ஜன 16, 2024 15:14

தனுஷ்கோடி தலைமன்னார் இடையே உள்ள கடல் தூரம் இருபத்து நாலு கிலோ மீட்டர் .மும்பையில் இருப்பது கிலோமீட்டர் தூரம் கடலில் பாலம் கட்டப்பட்டுள்ளது போன்று இங்கேயும் பாலம் கடலில் காட்டிநாள் இங்கு பொருளாதாரம் முன்னேறும் . மும்பையில் பாலம் பகுதயில் உள்ள கடல் சற்று அமைதியானது .


Loganathan Kuttuva
ஜன 16, 2024 15:08

Dhanushkodi Pier railway station was located on the northeast side of Dhanushkodi.The steamer ship used to anchor at the pier and can be reached by passengers from train by walk after completing immigration and customs check up on the opposite side of the ship.


Loganathan Kuttuva
ஜன 16, 2024 14:41

dhanushko


மலரின் மகள்
ஜன 16, 2024 13:52

இராணுவ கேந்திரிய முக்கியமான பகுதியாக இருக்கிறது. அதற்காகவே சாலைகள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. சுற்றுலாவின் பொருத்திற்காக அல்ல. அமைதியான காலங்களில் சுற்றுலா பயனியரின் பொழுதுபோக்குமிடமாக அனுமதிக்கப் பட்டிருக்கிறது. கச்சத்தீவை மீட்ட பிறகே தனுசுகோடியை வர்த்தக துறைமுகமாக மாற்ற முடியும். சென்னை எழும்பூரிலிருந்து போட் மெயில் சேவை இருந்ததது. தனுசுகோடியில் ஒரு மருத்துவக் கல்லூரியும் செயல்பட்டு வந்தது. அறுபது வருடங்களுக்கும் மேலாக இயற்கை சீற்றம் இல்லாத காரணத்தாலும் மேம்பட்ட அறிவியலின் முன்னறிவிப்பில் அங்கு இயற்கை பேரிடருக்கு வாய்ப்புக்கள் இல்லாததாலும் அதை வர்த்தக சுற்றுலா நகரமாக மாற்றலாம். இராணுவ பாதுகாப்பின் மேம்பாடு கச்சத்தீவை மீட்ட பிறகு தனுசுகோடி வளரும். இராமேச்வரமும் தனுசுகோடியும் இணைந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிறப்பு நிர்வாக மண்டலமாக மாறும். அப்போது மிகப்பிரமாண்ட வளர்ச்சியை பெரும். இப்போதே இதை எப்படியோ அறிந்து பலர் அங்கு முதலீடு செய்திருக்கிறார்கள். தெரிந்தும் அங்கு முதலீடு செய்யும் வாய்ப்புக்களை நாங்கள் விட்டு விட்டோம். ஜெய் ஸ்ரீ ராம் கோசம் அங்கே ஆன்மீகத்தை பரப்பும். ஜெய் ஹனுமான்


Sathyam
ஜன 16, 2024 14:25

மிகவும் சரி, முதல்லே இந்த நாத்தம் பிடிச்ச சனியன் பிடிச்ச கிறிஸ்துவ கூட்டத்தை அடக்கணும் ஒழிச்சு கட்டணும் அப்பதான் நாடு முன்னேறும் கன்யாகுமாரில விமான நிலையம் வரக்கூடாது அப்டின்னு இந்த கூட்டம் தான் எதிர்ப்பு தெருவிச்சுது , என்ன இவங்க அப்பன் வீட்டு பூர்விக பூமியை தென்மாவட்டம் சீக்ரம் உளவு துறை வெச்சு சதி திட்டம் தீட்டி எப்டியாவது இந்த விஷ மிஷனரி கொட்டத்தை ஒழிச்சு கட்டணும் முள்ளய் முள்ளால் தான் எடுக்கணும் , இனி மத்திய அரசு சாம தண்ட பேட யுத்தியை தான் கடைபிடிக்கணும் அப்ப தான் இவன் ஒழிஞ்சு தொழில் வளம் முன்னேற்றம் வரும் தமிழ்நாட்டோட சாபக்கேடு நீங்கும்


rama adhavan
ஜன 16, 2024 11:29

முதலில் ரயில் வரட்டும். அதன்பின் நகரம் முன்னேறும். அப்புறம் கப்பல் போக்குவரத்தை துவங்கலாம். இதற்கு எல்லாம் இன்னும் 60-70 ஆண்டுகள் ஆகலாம். இப்போதைக்கு இயலும் எனத் தோன்றவில்லை.


RADE
ஜன 16, 2024 08:16

அந்த இடம் இயற்கை சீற்றத்தால் இன்னும் பேரழிவு கொள்ளும் என்று இருப்பதால் மக்கள் வரிப்பணம் அதிகம் செலவு செய்து பயன் இல்லை. இனி வரும் காலங்களில் நாம் பல புயல்களை சந்திக்கவும் கடல் நீர் அதிகம் கரையை கடந்து ஊருக்குள் வரும் காலம். 40/50 குடும்பம் வருவாய் பார்த்து பல உயிர்களை இழக்க பொருட்சேதம் என்று இல்லாமல் பார்த்து கொள்ளணும்.


Svs Yaadum oore
ஜன 16, 2024 07:24

இங்கு மதம் மாற்றிகள் ஆளும் வரை தனுஷ்கோடி துறைமுக நகரம் மீண்டும் வர்த்தக நகரமாக வாய்ப்பில்லை ...ரூ.70 கோடிக்கும் மேல் செலவு செய்து தனுஷ்கோடிக்கு சாலை அமைத்துள்ளது மத்திய அரசு தான் ....ஆனால் ரயில் பாதை அமைக்க இங்குள்ள விடியல் அரசு எதிர்ப்பு ....காரணம் சுற்று சூழல் போராளி போர்வையில் உள்ள மதம் மாற்றிகள் ....இந்த ரயில் பாதை அமைந்தால் ராமநாதபுரம் மாவட்டமே உயிர்ப்பெறும் ....


Sathyam
ஜன 16, 2024 12:10

மிகவும் சரி இந்த மத மாற்ற பிணம் தின்னி கழுகுகள் நித்சயமாக குறுக்கே நிற்பார்கள், ஏன் என்றால் கன்னியாகுமாரி மிக பேராபலமான சுற்றுலா தளம் ஆனா அங்கே இந்த நாத்தம் பிடிச்ச பீடை பிடிச்ச பாதிரியார்கள் எதிருப்பு போராட்டம் கூட நடத்தினார்கள் , அது மட்டும் இல்லை கொல்சேல் துரைமாகும் கூட அப்டி தான் இதே கேடுகெட்ட பாதிரி கும்பல் தான் காரணம் என்னோமோ கன்னியாகுமாரி தெண்டமாவட்டம் இவங்க முன்னோர்கள் சொத்துமாதிரி எப்ப இவனுங்க மாடம் மாறிட்டாங்களோ அப்பேவே இவங்க பூர்விகம் உரிமை இழந்தாச்சு , இனி இந்த தீய சக்திகளை மத்திய அரசு வன்முறை கடுமையா தான் கைஆளனும் , உச்ச நீதி மன்றம் வரை இவங்களோட கொட்டத்தை அடக்கி வழக்கு போட்டு இவங்களை ஒழிச்சு கட்டணும் அப்பா தான் தமிழ்நாட்டுக்கு உண்மையான விமோச்சனம்


Svs Yaadum oore
ஜன 16, 2024 07:20

கடந்த 1964 இல் தாக்கிய புயலில் தனுஷ்கோடி ரயில் பாதை முற்றிலும் அழிந்தது....ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை, புது ரயில் பாதை அமைக்க, மத்திய அரசு மொத்தம் 733 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட அனுமதி 2019இல் அடிக்கல் நாட்டப்பட்டது ....ஆனால் இன்னும் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.இதற்கு காரணம் இங்குள்ள மத மாற்றிகள் அரசு இதனால் கடலோர சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும், ரயில் போக்குவரத்துக்கான தேவையும் அதிகளவில் இல்லை என்றும் முட்டுக்கட்டை ..இதெல்லாம் மக்கள் உணர்ந்து இத்திட்டம் செயல்படுத்த உதவ வேண்டும் ...


Kasimani Baskaran
ஜன 16, 2024 05:30

அங்கு சென்ற பொழுது ஒரு ஏன் என்று விளக்க முடியாத, இனம்புரியாத சோகத்தை உணர்ந்தேன்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை