உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜய் பின்னால் செல்கிறீர்களே; பிரசங்கத்தில் பாதிரியார் புலம்பல்

விஜய் பின்னால் செல்கிறீர்களே; பிரசங்கத்தில் பாதிரியார் புலம்பல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி: சர்ச் திருவிழாவில் பங்கேற்ற பாதிரியார் ஒருவர், 'எல்லாரும் விஜய் பின்னால் செல்கிறீர்களே' என, பிரார்த்தனையின்போது பேசினார். அதற்கு, 'சர்ச்சில் அரசியல் பேச வேண்டாம்' என, அங்கிருந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். துாத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள சர்ச்சில், நேற்று சிறப்பு திருப்பலி நடந்தது. பாதிரியார் அலாய்சியஸ் முன்னிலையில், திருநெல்வேலி செயின்ட் சேவியர்ஸ் கல்லுாரி முதல்வரும், பாதிரியாருமான காட்வின் ரூபஸ் சிறப்பு பிரசங்கம் செய்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2ksvw1ud&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் பேசுகையில், “நம் பிள்ளைகள் அனைவரும் விஜய் ரசிகர்களாக உள்ளனர். 41 பேரை கொன்று குவித்தவனுக்கு, கையில் விலங்கிட்டவர் போல கைக்காட்டும் தலைவரான விஜய் பின்னால் செல்லும் கூட்டம் அதிகமாகுகிறது. “நான் விஜய்க்கு எதிரி அல்ல, ஆனால், நம் இளைஞர்கள், குழந்தைகள் எல்லாம் சினிமா நடிகர் பின்னால் ஏன் போய் கொண்டிருக்கின்றனர் என்ற கேள்வியை கேட்க வேண்டும். பாரம்பரியம் என்பது இன்றோடு, நேற்றோடு முடிவது அல்ல. அது தொடர்ந்து கொண்டே இருக்கும்,” என்றார். பாதிரியார் காட்வின் ரூபஸ் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த த.வெ.க., தொண்டர்கள், சர்ச் பாதிரியார் அலாய்சியஸிடம் புகார் தெரிவித்தனர். 'சர்ச்சை, அரசியல் மேடையாக்க வேண்டாம், பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, அவர் வீடியோ வெளியிட வேண்டும்' என இளைஞர்கள் முறையிட்டனர். மேலும், 'ஒரு வழக்கு சி.பி.ஐ., விசாரணையில் இருக்கும் போது, மக்கள் மத்தியில் அவதுாறு பரப்புவது, உள்நோக்கத்துடன் செயல்படும்ஒரு கிரிமினல்குற்றம்' என அவர்கள் குற்றஞ்சாட்டினர். 'பாதிரியார் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, தி.மு.க., ஏஜன்டாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது' என, த.வெ.க., தொண்டர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Ramesh Sargam
டிச 23, 2025 21:17

இளைஞர்கள் அரசியல் பக்கமே வரக்கூடாது.


Sivakumar
டிச 23, 2025 20:26

TheemKaa is a secular anti Hindu unit since they are freely distributing all the collections from the Hindu temples to non Hindus and worst, they believe Hindu votes can be bought for RS 2000/- plus freebies in the next six months. TheeemKaa is very confident of winning the next assembly elections with a huge margin (by splitting votes thanks to Ti Ve Ka) and for sure, public memory is very short. Hmm...


M S RAGHUNATHAN
டிச 23, 2025 18:37

திமுக மத சார்பற்ற கட்சி. நம்புங்கள் தமிழக மக்களே.


ramesh
டிச 23, 2025 18:00

மீனவர் சமுதாய மக்கள் விஜய்யை ஆதரிக்கிறார்கள்.அவர்கள் R சி கிறிஸ்டியன்கள். வீரபாண்டியன் பட்டணம் அந்த சமுதாய மக்கள் வாழும் பகுதி ஆகும்


என்றும் இந்தியன்
டிச 23, 2025 17:39

நடிகன் நடிகை இவர்கள் வாழ்க்கை அவர்களுக்கு சொந்தமானது அல்ல. அப்படியே வாழ்ந்தவர்கள். பணம் கிடைக்கும் டைரக்டர் சொல்வார் அப்படியே செய்வார்கள் பணம் பணம் பணம் கொடு எதற்கும் ரெடி ஜாதி இவர்கள். இவர்களின் பின்னால் செல்பவர்கள் யோசிக்கத்தெரியாத அறிவிலிகள்


rasaa
டிச 23, 2025 17:09

அந்த படித்த இளைஞர்களுக்கு பாராட்டுக்கள். இதுபோல் இஸ்லாம் இளைஞர்கள் மசூதியில் பேசுவார்களா?


SIVA
டிச 23, 2025 17:02

இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல மாட்டார் இந்த நடிகர் ஜோசப் விஜய் சந்திரசேகர் , ஆனால் கரூர் சம்பவத்துக்கு இந்து பண்டிகையான தீபாவளி கூடாது என்று வெட்டி அறிக்கை விடுவார் , ஏன் கிறிஸ்துமஸ் கொண்டாடாமல் இருக்க வேண்டியது தானே இது தான் மதச்சார்பின்மையா ....


nagendhiran
டிச 23, 2025 17:00

திமுக பின்னால் சென்றிருந்தால் சும்மா இருந்திருப்பான்?


SIVA
டிச 23, 2025 16:59

இப்ப புரியுதா நான் ஏன் நடிகர் ஜோசப் விஜய் சந்திரசேகர் என்று எழுதுகின்றேன் என்று , விஜய் அரசியலுக்கு வந்தால் இவர் ஏன் புலம்ப வேண்டும் , இந்த நடிகர் ஜோசப் விஜய் சந்திரசேகர் ஒரு முழுமையான கிறிஸ்டின் அதனால் தான் இந்த புலம்பல் அவர் வேறு மதமாக இருந்தால் இந்த புலம்பல் வந்து இருக்காது , அவர் கட்சி துவங்குவேன் என்று அறிவித்த தினம் கிறிஸ்தவர்கள் பொறுத்த வரை அன்று துவங்கும் விஷயம் பல மடங்கு வளரும் என்று ஒரு நம்பிக்கை இந்த நிலையில் இவரை நடிகர் ஜோசப் விஜய் வஹந்திரசேகர் என்று சொல்வதில் என்ன தவறு ...


ram
டிச 23, 2025 16:39

ஹிந்து கோவில்களில் கடவுள் மந்திரம் சொல்லக்கூடாது என்று தடை இந்த திருட்டு திமுக அரசால் ஆனால் சர்ச் மசூதி இவர்கள் அரசியல் பேசலாம், அங்கு வரும் மக்களை மூளை சலவை செய்து திருட்டு திமுகவுக்கு வோட்டு போடா சொல்லலாம். சிறுபான்மையினரை குஷி படுத்துவதற்கு ஹிந்துக்களை எவ்வளவு கீழ்தரமாக அசிங்க படுத்தலாம், அவர்கள் கோவில்களை இடிக்கலாம், இதில் என்ன வேதனை அந்த திருட்டு திமுக கட்சியில் இருக்கும் ஹிந்துக்களும் இதை பார்த்து சந்தோஷ படுகிறான்கள். அதனால்தான் திருட்டு திமுக மந்திரிகள் ஒருத்தன் ..... என்று சொல்லிக்கொண்டு திரிகிறான், இன்னொருவன் பெருமாள் சிவன் கோவில்களை இந்த கைகளால் இடித்தேன் என்று சொல்லுகிறான், இன்னொருத்தன் சிவன் பெருமாள் SYMBOLAI வைத்து அசிங்கமாக பேசுகிறான், இதற்கு எப்போது முடிவு வரும் என்று தெரியவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை