உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

வானுார் : கோட்டக்குப்பம் கலால் இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் போலீசார் நேற்று ஆரோபுட் தனியார் நிறுவனம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மார்க்கத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி சாக்கு மூட்டையுடன் பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அவர்கள், 90 குவாட்டர் மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது.விசாரணையில், திண்டிவனம் அடுத்த கீழ் ஆதனுார் மங்கலத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் மணிமாறன், 25; ஆறுமுகம் மகன் அஜய், 28; என்பதும், புதுச்சேரி மாநிலம் சேதராப்பட்டில் இருந்து மதுபாட்டில்கள் கடத்திச் சென்றது தெரிய வந்தது.இருவரையும் போலீசார் கைது செய்து, பைக் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ