உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சித்தானந்த கோவிலில் 28ம் தேதி குரு பூஜை விழா

சித்தானந்த கோவிலில் 28ம் தேதி குரு பூஜை விழா

புதுச்சேரி: கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோவிலில், நாளை மறுநாள் 28 ம் தேதி குரு பூஜை விழா நடக்கிறது.கருவடிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், குரு சித்தானந்த சுவாமியின் 187வது ஆண்டு குரு பூஜை விழா, நாளை 27ம் தேதி மாலை 6:00 மணிக்கு கலச பிரதிஷ்டை, கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது.நாளை மறுநாள் 28ம் தேதி, காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ருத்ர ஜபம் நடக்கிறது. காலை 7:00 மணிக்கு மகா அபிேஷகம், பூரணாஹூதி, காலை 9:30 மணிக்கு, கலச புறப்பாடு, சுவாமிக்கு கலசாபிேஷகம், சிறப்பு அலங்காரம் செய்து தீபராதனை நடக்கிறது.அதைத் தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு அன்னதானம், மாலை 6:00 மணிக்கு தீபாராதனை, இரவு 10:00 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ