உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்களை கேலி செய்த 4 பேர் கைது

பெண்களை கேலி செய்த 4 பேர் கைது

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம், சுப்பையா நகர் பகுதியில், சிலர் அவ்வழியாக செல்லும் பெண்களை கேலி செய்வதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பெண்களை கேலி செய்து கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள், அரியாங் குப்பம் சுப்பையா நகரை சேர்ந்தவர் தமிழ்வேல், 20; டி.கே.வி., தெருவை சேர்ந்தவர் ஹரிகரன், 29; சேவியர், 20; பிரபு, 25; என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை