உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழா

திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழா

வில்லியனுார் : வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் ஆடிப்பூர தேரோட்டத்தை அமைச்சர்கள் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.வில்லியனுார் கோகிலாம்பிகை உடனுறை திருகாமீஸ்வரர் கோவில் ஆடிப்பூரத் தேர்த் திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 7:30 மணிக்கு மேல் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வான வேடிக்கையுடன் மாட வீதியுலா நடந்து வருகிறது.முக்கிய விழாவாக ஆடிப்பூர தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 8:15 மணியளவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.பொதுமக்கள் மற்றும் சங்கர்ஸ் வித்யாலயா பள்ளி மாணவர்கள் தேர் இழுத்தனர். மாடவீதிகள் வழியாக சென்ற தேர் காலை 10:00 மணியளவில் நிலையை வந்தடைந்தது. இன்று 7ம் தேதி காலை தீர்த்தவாரி, வளையல் உற்சவம், நாளை இரவு 7:30 மணிக்கு தெப்பல் உற்சவம், 9ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அலுவலர் திருகாமீஸ்வரன் உட்பட பலர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ