உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதையில் ரகளை செய்த சென்னை வாலிபர்கள் கைது

போதையில் ரகளை செய்த சென்னை வாலிபர்கள் கைது

புதுச்சேரி: பொது இடத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.ரங்கப்பிள்ளை வீதியில் 4 வாலிபர்கள் அதிகமாக மதுகுடித்து விட்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் ரகளை செய்தனர். இதுகுறித்து, பொதுமக்கள் பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பெரியக்கடை சப் இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் அங்கு சென்று போதையில் நிதானமில்லாமல் இருந்த 4 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் சென்னையை சேர்ந்த தினேஷ், 24; யுவராஜ், 24; ஹரிகரன், 24; மோகன், 23; என தெரியவந்தது. நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி