உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் 

திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் 

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த காட்டேரிக்குப்பம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் நடந்தது.தீமிதி உற்சவம் கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வந்தது. கடந்த 16ம் தேதி இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடந்தது.இதில் காட்டேரிக்குப்பம் மற்றும் அதனை சுற்றி யுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று இரவு 8:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகம், சுவாமி வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ