உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்குவரத்திற்கு இடையூறு; வாகனங்கள் பறிமுதல்

போக்குவரத்திற்கு இடையூறு; வாகனங்கள் பறிமுதல்

புதுச்சேரி : புதுச்சேரி நேரு வீதியில் போக்குவரத்து இடையூராக நிறுத்தப்பட்ட பைக்குகளை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.புதுச்சேரிநேரு வீதிவில்போக்குவரத்து நெரிசலை தடுக்கும் பொருட்டு, 6 மாதத்திற்கு ஒருமுறை வாகன நிறுத்தம் மாறியமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜூன் 1ம் தேதி முதல் வாகனங்கள் நிறுத்தம் தெற்கு புறத்திற்கு மாற்றப்பட்டது.இருப்பினும், நேரு வீதிக்கு வரும் வாகன ஓட்டிகள் தங்களது பைக்குகளை சாலையின் இரு புறங்களிலும் நிறுத்தி விட்டு, கடைகளுக்கு செல்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கிழக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் போலீசார் நேற்று மாலை நேரு வீதியில் ரோந்து சென்றனர்.அப்போது, போக்குவரத்திற்கு இடையூராகவும், போலீஸ் உத்தரவை மீறி நேரு வீதியின் வடக்கு புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளைபறிமுதல் செய்து, ஸ்டேஷன் கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை