உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மயங்கி விழுந்து டிரைவர் சாவு

மயங்கி விழுந்து டிரைவர் சாவு

புதுச்சேரி: டிரைவர் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேதாரப்பட்டு, மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம், 34; டாடா ஏஸ் டிரைவர். தாயுடன் வசித்து வருகிறார். குடிப்பழக்கம் உள்ள பொன்னுரங்கம் நேற்று மதியம் 1:00 மணியளவில், அவரது சித்தப்பா வீட்டில் மயங்கி விழுந்தார்.உடனே அவரை உறவினர்கள் மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து பொன்னுரங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ