உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குப்பை குவிந்து சுகாதார சீர்கேடு

குப்பை குவிந்து சுகாதார சீர்கேடு

புதுச்சேரி: பா.ம.க., மாநில அமைப்பாளர்கள் கணபதி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை;புதுச்சேரியில், உள்ளாட்சி துறை மூலம் திடக்கழிவு ​மேலாண்​மை பணிகள் ​மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீப காலமாக குப்பைகள் முழுமையாக ​சேகரிக்கப்படாமல் ஆங்காங்கே ​தேங்கி கிடக்கிறது. அதனால், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ஒப்பந்ததாரர்கள் ஒவ்வொரு மாதம் பணி​ செய்ததற்கான பில் கடந்த 4 மாதங்களாக நிதி வழங்காமல் இருக்கிறது.துாய்மை பணி செய்யும் தொழிலாளர்களுக்கு மாதம் சம்பளம் வழங்க இயலாத நிலையில், பணியாளர்கள் வேலைக்கு வருவதில்லை. இப்பிரச்னையை முதல்வர் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை