| ADDED : ஜூலை 31, 2024 04:12 AM
புதுச்சேரி : புதுச்சேரி 15வது சட்டசபை 5வது கூட்டத்தொடர் கவர்னரின் உரை நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிப்பரப்பப்படுகிறது.இதுகுறித்து, சட்டசபை செயலர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:புதுச்சேரியில் 15வது சட்டசபை, 5வது கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்கு கவர்னர் ராதாகிருஷ்ணன் உரையுடன் துவங்குகிறது. கவர்னரின் உரை நிகழ்ச்சி, சமூக வலைதங்களான யூடிப், பேஸ்புக், டியூட்டர் ஆகியவற்றின் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், துர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படுகிறது. இந்த உரை நிகழ்ச்சிகளை https//www.youtube.com/live/ZtYzlQkxdE எனும் முகவரியில் பொதுமக்கள் காணலாம்.இது தவிர, உள்ளூர் தொலைக்காட்சி மூலமாகவும் இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.