உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தவளக்குப்பம் நேஷனல் பள்ளியில் சுதந்திர தின விழா

தவளக்குப்பம் நேஷனல் பள்ளியில் சுதந்திர தின விழா

பாகூர்: தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில், சுதந்திர தின விழா நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் டாக்டர் எழிலரசி கிரண்குமார் வரவேற்றார். பள்ளி சேர்மன் டாக்டர் கிரண்குமார் தேசியக் கொடியேற்றி வைத்தார் . தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது.இதில், மாணவர்கள் தேசத் தலைவர்கள் போல் வேடமணிந்து வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பள்ளி மாணவர்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக மும்மொழியில் உரையாற்றினர்.மேலும், மாணவர்கள், யோகா, சிலம்பம் போன்றவற்றை செய்து காண்பித்து அசத்தினர். விழாவையொட்டி, பள்ளி மாணவ - மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியை உமா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்