உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு விசாரணை 14ம் தேதி ஒத்திவைப்பு

கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு விசாரணை 14ம் தேதி ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி : கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில், ஆசிரியைகளை நீக்கப்பட்டதை எதிர்த்து மாணவியின் தாய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து, ஸ்ரீமதியின் தாய் செல்வி அளித்த புகாரில், சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து, பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2023ம் ஆண்டு மே 15ம் தேதி, 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் தாக்கல் செய்தனர்.அதில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோரை வழக்கிலிருந்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் நீக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறுமியின் தாய் செல்வி மனு அளித்தார்.இம்மனு மீதான விசாரணை, கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் தேவச்சந்திரன் ஆஜரானார்.இதில், செல்வி தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கின் விசார ணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை