உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கண் அறுவை சிகிச்சைக்கு சென்ற பெண் மாயம்

கண் அறுவை சிகிச்சைக்கு சென்ற பெண் மாயம்

அரியாங்குப்பம், : கண் அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரி சென்ற மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள கீழப்பரசலுாரை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி சரஸ்வதி, 58. இவர், புதுச்சேரி, தவளக்குப்பம் தனியார் கண் மருத்துவமனை மூலம் தரங்கம்பாடியில் நடந்த கண் சிகிச்சை முகாமில் பங்கேற்றார். அப்பகுதியை சேர்ந்தவர்கள், கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக, கடந்த 29ம் தேதி, அங்கிருந்து ஒரு பஸ்சில், தவளக்குப்பம், கண் மருத்துவமனை சார்பில், அழைத்து வரப்பட்டனர்.சரஸ்வதி, கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக, அந்த பஸ்சில் வந்து மருத்துவமனையில் தங்கியுள்ளார். அவர் கண் அறுவை சிகிச்சை செய்யாமல் மாயமாகியுள்ளார். அவருடன் வந்தவர்கள், சரஸ்வதியின் கணவருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, அவரது கணவர், மருத்துவமனை மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும், கிடைக்கவில்லை.இதுகுறித்து, புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை