உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதலை கடித்து மூதாட்டி காயம்

முதலை கடித்து மூதாட்டி காயம்

காட்டுமன்னார்கோவில் : ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற மூதாட்டி, முதலை கடித்து காயமடைந்தார்.காட்டுமன்னார்கோவில் அடுத்த கொள்ளிடக்கரையோரம் உள்ள நடுக்கஞ்சங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சின்னம்மா,70; இவர், நேற்று மாலை 4:00 மணிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்காக ஆற்றங்கரையோரம் ஓட்டி சென்றார்.அப்போது ஆற்றங்கரையில் படுத்திருந்த முதலை ஒன்று திடீரென, சின்னம்மா காலை கடித்து குதறியது. படுகாயமடைந்த சின்னம்மா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை