உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பங்குனி உத்திர விழா ..

பங்குனி உத்திர விழா ..

பாகூர்: கிருமாம்பாக்கம் அடுத்த வள்ளுவர்மேடு கிராமத்தில் பழமை வாய்ந்த தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 114ம் ஆண்டு பங்குனி உத்திர காவடி பூஜை விழா, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்து வந்தது. காவடி பூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 10:30 மணிக்கு ஊர் எல்லையில் இருந்து பால் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சுவாமிக்கு அபிேஷகம் செய்யப்பட்டது.மாலை 4:00 மணிக்கு காட்டுக்குப்பம் ஏரிதாங்கள் பகுதியில் இருந்து காவடி மற்றும் வேலுக்கு அபிேஷக ஆராதனை செய்து, காவடி தேர் புறப்பட்டது.திரளான பக்தர்கள் அலகு குத்தியும், வேல் சுமந்தும், தேர் இழுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்