உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீசாரை தாக்கியதை கண்டித்து மறியல்

போலீசாரை தாக்கியதை கண்டித்து மறியல்

புதுச்சேரி: வில்லியனுாரில், குற்றவாளிகளை பிடிக்க சென்ற போலீஸ்காரர் தாக்கப்பட்டார்.குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி மகளிர் முன்னேற்ற அமைப்பின் தலைவர் அருள்பூஷனி தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாலை 6:30 மணியளவில், ராஜிவ் சதுக்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதையடுத்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் டி.நகர் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்ததையடுத்து, மறியலை கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி