மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்
21-Aug-2024
திருபுவனை: திருபுவனை அரசு உயர்நிலைப் பள்ளிப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் மழை கோட் வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் சரவணன் தலைமை தாங்கினார். ஆசிரியை சாந்தி வரவேற்றார்.விழாவில் தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் பங்கேற்று, கடந்த ஆண்டு 9ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் 34 பேருக்கு இலவச சைக்கிள் மற்றும் மழைகோட் வழங்கி பேசினார். மேலும் ஸ்வச்சதா பக்வாடா - 2024 நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆசிரியை கோதை நாயகி நன்றி கூறினார்.
21-Aug-2024