உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பலாத்கார வழக்கு: மீனவருக்கு 10 ஆண்டு சிறை புதுச்சேரி கோர்ட்டில் தீர்ப்பு

பலாத்கார வழக்கு: மீனவருக்கு 10 ஆண்டு சிறை புதுச்சேரி கோர்ட்டில் தீர்ப்பு

புதுச்சேரி : புதுச்சேரி, பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் மேகன் (எ) மலையாளத்தான், 58; மீனவர்.இவர், கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி இட்லி விற்றுவிட்டு வந்த 40 வயது பெண்ணை, புதுக்குப்பம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இழுத்துச் சென்று பலாத்காரம் செய்தார்.இதுகுறித்த புகாரின் பேரில், மலையாளத்தானை கைது செய்த தவளக்குப்பம் போலீசார், அவர் மீது புதுச்சேரி முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசுதா, மலையாளத்தான் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை