உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் சிறப்பு முகாம்

உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் சிறப்பு முகாம்

புதுச்சேரி : உழவர்கரை நகராட்சியில், சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரி வசூல், சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.இதுகுறித்து, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சொத்து வரி, வீட்டு வரி மற்றும் சேவை வரி வசூல் சிறப்பு முகாம், கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலை பள்ளியில், இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.எனவே, கதிர்காமம், திலாஸ்பேட்டை, வீம கவுண்டபாளையம், இந்திரா நகர், கவுண்டன் பாளையம், வி.பி.சிங்., நகர் பகுதிகளில் உள்ளவர்கள், 2024 -25ம் ஆண்டு வரையிலான சொத்து உள்ளிட்ட வரிகளை செலுத்தலாம்.அதே போல, தட்டாஞ்சாவடி வி.பி.சிங்., நகர் வீட்டு வரி வசூல் மையத்தில், காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, பொதுமக்கள் வரிகளை செலுத்தலாம். மேலும், igrams.py.gov.inஆன்லைன் மற்றும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் வரிகளை செலுத்தலாம்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை