உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூதாட்டியிடம் திருட்டு

மூதாட்டியிடம் திருட்டு

அரியாங்குப்பம் : தேர் திருவிழாவில், மூதாட்டியிடம் மொபைல் மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் மாலை, தேர் திருவிழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட 60 வயது மூதாட்டி வைத்திருந்த துணிப்பையில் இருந்த மொபைல் போன் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி, அங்கிருந்த போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.இது குறித்து தவளக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை