உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

புதுச்சேரி : பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத் துறையில் இந்து கடவுளை இழிவுப்படுத்தி நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இது தொடர்பாக விசாரணை நடத்திய பல்கலைக்கழக நிர்வாகம் நாடக துறை மாணவர் புஷ்பராஜ்யை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதற்கிடையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர் புஷ்பராஜ் நேற்று பல்கலைக்கழகம் சென்றார். ஆனால் அவரை அனுமதிக்கவில்லை. இதனையடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு தரப்பினர் நாடகத் துறை எதிரே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவரை வகுப்பிற்குள் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை