மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
17 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
17 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
17 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
17 hour(s) ago
வானுார், : வானுார் அருகே வி.சி., கட்சிக் கொடி கம்பம் நடும்போது, மின்சாரம் தாக்கியதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, விழுப்புரம் மாவட்டம் வானுார் அடுத்த சின்னகாட்ராம்பாக்கத்தை சேர்ந்த வி.சி., கட்சியினர் புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலை சந்திப்பில் நேற்று காலை 8:50 மணிக்கு, 20 அடி உயர இரும்பு கொடிக் கம்பத்தை நட நிமிர்த்தினர்.அப்போது, உயர்மின் அழுத்த கம்பியில் கொடி கம்பம் உரசியதில், மின்சாரம் பாய்ந்து, கம்பத்தை துாக்கிய அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மோகன்,22; வேலு மகன் அருண்பாண்டியன்,22; காந்தாமணி,53; சக்திவேல் மகன் அஸ்விந்த்,12; அருள் மகன் அமர்நாத்,17; ஆகியோர் படுகாயமடைந்தனர்.உடன், அவர்கள் 5 பேரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago