உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்கள் கிரிக்கெட் போட்டி: ஏஞ்சல்ஸ், குயின்ஸ் அணிகள் வெற்றி

பெண்கள் கிரிக்கெட் போட்டி: ஏஞ்சல்ஸ், குயின்ஸ் அணிகள் வெற்றி

புதுச்சேரி : புதுச்சேரி பெண்கள் கிரிக்கெட் போட்டியில், ஏஞ்சல்ஸ் மற்றும் குயின்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.புதுச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் டி.சி.எம்., நிறுவனம் சார்பில், 4 அணிகள் மோதும், 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட் போட்டி, சி.ஏ.பி.சீகெம் மைதானத்தில் நடந்து வருகிறது.நேற்று காலை நடந்த முதல் போட்டியில் ஏஞ்சல்ஸ் மற்றும் டைமண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக, 7 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில், முதலில் ஆடிய டைமண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட, 7 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 52 ரன்கள் மட்டுமே எடுத்தது.தொடர்ந்து ஆடிய ஏஞ்சல்ஸ் அணி 6.4 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை இழந்து, 53 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், 18 பந்துகளில் 24 ரன்கள் அடித்த ஏஞ்சல்ஸ் அணியின் ஈஷா மாவி ஆட்டநாயகி விருது பெற்றார்.அடுத்ததாக, மதியம் நடந்த போட்டியில், பிரின்சஸ் மற்றும் குயின்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பிரின்சஸ் அணி, 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து, 124 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில், குயின்ஸ் அணியின் யாஷி பண்டே, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய குயின்ஸ் அணி, 18.4 ஓவர்களிலேயே, 4 விக்கெட்டுகளை இழந்து, 125 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்து வீச்சில் அசத்திய யாஷி பாண்டே, 52 பந்துகளில் 57 ரன்கள் அடித்து ஆட்டநாயகி விருதை கைப்பற்றினார். இந்த போட்டிகள், வரும், 21ம், தேதி நிறைவு பெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை