உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  திருநள்ளார் கோவிலில் 1008 சங்காபிேஷகம்

 திருநள்ளார் கோவிலில் 1008 சங்காபிேஷகம்

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வர கோவிலில் கார்த்திகை மாத சோமவார திங்கள் கிழமைகளில் விஷேச பூஜைகள் நடைபெறும். இதன்படி ஒவ்வொரு திங்கள் கிழமையும் 108 சங்காபிஷேகம் நடந்தது. சோமவார நிறைவையொட்டி நேற்று 1008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, மகாபூர்ணாஹீதி தீபாரதனை நடந்தது. தர்பாரண்யேஸ்வரர் சனிஸ்வரபகவாக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. கோவிலில் உள்ள சொர்ணகணபதி, முருகன், பிரணாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடந்தது. சங்காபிஷேகத்தில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை சட்டநாத தம்பிரான் சுவாமிகள்,கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி