மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை வாலிபர் கைது
15-Mar-2025
புதுச்சேரி : முத்தியால்பேட்டையில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.முத்தியால்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் நேற்று மாலை வைத்திக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அங்கு நின்று கொண்டிருந்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சக்திநாராயணன், 22; முகிலன், 20; தீபக், 19, என்பதும் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது.போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
15-Mar-2025