உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சைபர் மோசடி கும்பலிடம் 5 பேர் ரூ.2.46 லட்சம் இழப்பு 

சைபர் மோசடி கும்பலிடம் 5 பேர் ரூ.2.46 லட்சம் இழப்பு 

புதுச்சேரி: புதுச்சேரியில் 5 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 2.46 லட்சம் இழந்துள்ளனர். காட்டேரிக்குப்பத்தை சேர்ந்த நபரை, மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், தங்களுக்கு 5 லட்சம் வரை குறைந்த வட்டியில் லோன் தருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர், லோன் பெற விண்ணப்பித்தபோது, செயலாக்க கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளனர். இதைநம்பி, மர்மநபருக்கு ரூ. 17 ஆயிரம் செலுத்தி ஏமாந்தார். இதேபோல், அரியாங்குப்பத்தை சேர்ந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 68 ஆயிரத்து 563 ரூபாயை மர்மநபர்கள் எடுத்துள்ளனர். மேலும், லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 14 ஆயிரத்து 685, நைனார்மண்டபத்தை சேர்ந்தவர் 10 ஆயிரம், முத்தியால்பேட்டை சேர்ந்தவர் 36 ஆயிரம் என, 5 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 2 லட்சத்து 46 ஆயிரத்து 268 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி