மேலும் செய்திகள்
சர்ச் இடம் முறைகேடாக விற்பனை 4 பேருக்கு முன் ஜாமின்
5 hour(s) ago
சூதாட்டத்தில் தகராறு ஒருவருக்கு கத்தி வெட்டு
7 hour(s) ago
போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனை
7 hour(s) ago
முதியவர் தற்கொலை
9 hour(s) ago
புதுச்சேரி : எம்.டெக்., பட்டதாரியிடம் ரூ. 5.71லட்சத்தை மோசடி செய்த ஆன்லைன் மோசடி கும்பல் சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர். புதுச்சேரி ரெயின்போ நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 33; இன்ஜினியர். இவரது மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதைத் தொடர்ந்த பேசியவர் தன்னை சீனியர் சுமித் என்று அறிமுகம் செய்து கொண்டு, வெங்கடேஷிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று கூறினார். இதனை நம்பிய வெங்கடேஷ் முதலில் ரூ.4,500 முதலீடு செய்தார். அதற்கு அவருக்கு கூடுதலாக ரூ.1,500 கிடைத்தது. அதன் பின்னர் அவர் பல்வேறு தவணைகளாக ரூ.5 லட்சத்து 71 ஆயிரத்து 861 செலுத்தினார். அதன் பின்னர் அந்த பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. உடன் அவர் சீனியர் சுமித்தை தொடர்பு கொண்டார். ஆனால் அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.இதனால் தான் ஏமாற்றப்பட்டத்தை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார். வெங்கடேஷ் புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
9 hour(s) ago