ஆச்சார்யா சிக் ஷா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் தினமலர் பட்டம் வினாடி வினா போட்டி
வில்லியனுார்: வில்லியனுார் ஆச்சார்யா சிக் ஷா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில், 'தினமலர் -பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி நடந்தது. புதுச்சேரி 'தினமலர்- பட்டம்' இதழ் மற்றும் ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் பரிசு வெல்' மெகா வினாடி வினா போட்டியின், பள்ளி அளவிலான போட்டி வில்லியனுார் ஆச்சார்யா சிக் ஷா மந்திர் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளி முதல்வர் முகமது பரூக் தலைமை தாங்கினார். போட்டியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 450 மாணவர்கள் கலந்து கொண்டனர். முதல் நிலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 16 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தேர்வாகினர். 8 அணிகளாக பிரித்து இறுதி சுற்று போட்டி நடந்தது.இதில், ஸ்ரீநிதி மற்றும் யஷ்வந்த் அணி முதலிடம் பிடித்தனர். ஹரிஹரன் மற்றும் சுகிந்தரன் அணி 2வது இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற இரு அணிகளுக்கும் பதக்கம் மற்றும் பரிசுகளை பள்ளி முதல்வர் முகமது பரூக் வழங்கி பாராட்டினார். பள்ளி அளவில் வெற்றி பெற்ற முதல் இரு இடங்களை பிடித்த அணியினர் மெகா வினாடி வினா போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.