| ADDED : மார் 19, 2024 05:19 AM
புதுச்சேரி: பள்ளி கல்வித்துறை மூலம் நடத்தப்பட்ட யோக போட்டியில், பரிசுகள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.பாகூர் அரசு நடுநிலைப்பள்ளியில், பள்ளி கல்வித்துறை மூலம் 2023-24ம் ஆண்டுக்கான யோக போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று பரிசுகள் பெற்றனர். அவர்களுக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி பாராட்டி பரிசு வழங்கினார். ஆசிரியர் துரைசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், செல்வ குமரன், பிரபாவதி, சத்ய வதி, ராஜலட்சுமி, கார்த்திகேயன், ரம்யா, ஜெயக்குமார், சங்கீதா, உடற்கல்வி ஆசிரியர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். முகேஷ் நன்றி கூறினார்.