விழிப்புணர்வு நிகழ்ச்சி
நெட்டப்பாக்கம்: கரையாம்புத்துார் அரசுப் பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி துணை முதல்வர் மீனாட்சி தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் டேவிட் சாலமன் ராயன் முன்னிலை வகித்தார்.ஆசிரியை மெர்லின் லிடியா வரவேற்றார். சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், ஏட்டு பிரகாஷ், போலீஸ் ஜீவிதா ஆகியோர் போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து பேசினர். போதை ஒழிப்பு விழிப்புணர்வையொட்டி மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியைகள் தீபா, கலைவாணி, சதீஷ்குமார் பங்கேற்றனர்.