| ADDED : மார் 18, 2024 05:33 AM
திருக்கனுார், : திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு பார் உரிமையாளர்கள்- போலீசார் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் உத்தரவின் பேரில் நடந்த கூட்டத்திற்கு, சப் இன்ஸ்பெக்டர் பிரியா தலைமை தாங்கினார். உதவி சப் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் பிரியா, புதுச்சேரி லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஓயின்ஷாப் மற்றும் பார்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், போலீசார், பறக்கும் படையினர் திடீர் ஆய்வு செய்ய அனுமதி பெற்றுள்ளனர். இதனால், எந்நேரத்திலும் ஆய்வு செய்ய வரலாம்.ஆகையால், பொறுப்பாளர்கள் மதுபான விற்பனைக்கான ஆவணங்களை முறையாக வைத்திருக்க வேண்டும். அரசியல் கட்சியினரின் டோக்கன் நடைமுறைகளை பார்களில் அனுமதிக்க கூடாது.அனைத்து பார்களிலும் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும். தனிப்பட்ட நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது.தேர்தல்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை சரியாக கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.இக்கூட்டத்தில், திருக்கனுார் பகுதியில் உள்ள ஓயின்ஷாப் மற்றும் பார்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.