உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீராத வயிற்று வலி கார் டிரைவர் சாவு

தீராத வயிற்று வலி கார் டிரைவர் சாவு

புதுச்சேரி: தீராத வயிற்று வலியால் கார் டிரைவர் இறந்தார். பொறையூர் பேட் முதல் தெருவைச் சேர்ந்தவர் அருள்ராஜ், 34; கார் டிரைவர். குடிப்பழக்கம் உள்ள இவர் அல்சர் நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வந்தார். நேற்று முன்தினம் மாலை திடீரென அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை