மேலும் செய்திகள்
வரதட்சணை கொடுமை 5 பேர் மீது வழக்கு
23-Jul-2025
புதுச்சேரி, : மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். அரியாங்குப்பம், வானவில் நகரை சேர்ந்தவர் செண்பகம், 37. இவருக்கும், அதேப் பகுதியை சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்து வரும் குணசேகரன், 40; என்பவருக்கும் கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது, செண்பகம் வீட்டார், வரதட்சணையாக 25 சவரன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் சீர்வரிசையாக கொடுத்துள்ளனர். திருமணத்திற்கு பின், கணவருடன் வெளிநாட்டிற்கு செல்ல, செண்பகம் மேலும் ரூ.5 லட்சம் பெற் றோரிடம் வாங்கி கொடுத்துள்ளார். இருப்பினும், அவரை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லாமல், கணவர் குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு, செண்பகத்தை அடித்து துன்புறுத்தி வந்தனர். செண்பகம் அளித்த புகாரின் பேரில், கணவர் குணசேகரன், மாமியார் சாந்தி, உறவினர்கள் குணசுந்தரி, குணசெல்வி, திருவேங்கடசாமி ஆகியோர் மீது அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
23-Jul-2025