உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்ணை பீர் பாட்டிலால் தாக்கியவர் மீது வழக்கு

பெண்ணை பீர் பாட்டிலால் தாக்கியவர் மீது வழக்கு

நெட்டப்பாக்கம் : கல்மண்டபத்தில் பெண்ணை ஆபாசமாக பேசி பீர் பாட்டிலால் தாக்கியவரை போலீசார் தேடி வருகின்றனர்.கல்மண்டபம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஆர்த்தி ,24; இவர் தனது வீட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். இங்கு அதே பகுதியைச் சேர்ந்த அபினேஷ், 29; என்பவர் நேற்று மாலை கடைக்கு வந்து, ஆர்த்தி மாமனாரிடம் தகராறில் ஈடுபட்டார்.இதனை தட்டி கேட்ட ஆர்த்தியை அபினேஷ் அசிங்கமாக பேசி பீர் பாட்டிலால் தாக்கினார். மேலும் கடையில் இருந்த மாவு பாக்கெட்டைகளை கீழே தள்ளி கடையை சேதப்படுத்தினார். இதில் பலத்த காயமடைந்த ஆர்த்தியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின் அவர் வீடு திரும்பினார்.ஆர்த்தி கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் சப்- இன்ஸ்பெக்டர் குப்புசாமி வழக்குப்பதிந்து தாக்கிய நபரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை