உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெரும்பாக்கம் நவசக்தி பீடத்தில் நவராத்திரி விழா துவக்கம்

பெரும்பாக்கம் நவசக்தி பீடத்தில் நவராத்திரி விழா துவக்கம்

வானுார் : பெரும்பாக்கம் ஓம் ஸ்ரீ நவசக்தி பீடத்தில் நவராத்திரி விழா துவங்கியது.விழா கடந்த 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று மாலை 6;00 மணிக்கு அன்னை துர்கை அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.விழாவையொட்டி வரும் 12ம் தேதி வரை தினமும் மாலை 6:00 மணிக்கு துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட அலங்காரங்களில் அம்மன் அருள்பாலிக்கிறார். வரும் 11ம் தேதி சரஸ்வதி பூஜை விழாவும், 12ம் தேதி காலை 9:00 மணிக்கு ஓம் ஸ்ரீ நவசக்தி ஸ்ரீ நாகமுத்து மாரியம்மனுக்கு 108 பால்குட அபிேஷகமும் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு விஜயதசமி ஊஞ்சள் விழா, அன்னை வீதியுலா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை சீனுவாச சுவாமிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை