உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கழிவுநீர் கால்வாயில் ரூ.1.23 கோடியில் கான்கிரீட் பணி

கழிவுநீர் கால்வாயில் ரூ.1.23 கோடியில் கான்கிரீட் பணி

அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில், 1.23 கோ டி ரூபாய் மதிப்பில், கழிவுநீர் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவக்கப்பட்டது. அரியாங்குப்பம் தொகுதி, வானவில் நகரில், கழிவுநீர் கால்வாயில், கான்கிரீட் தளம் (ஆர்.சி.சி) கட்டுவதற்கு, பொதுப்பணித்துறை சார்பில், 1.23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் நேற்று துவக்கி வைத்தார். பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் சுந்தரமூர்த்தி, நீர் பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதா கிருஷ்ணன், உதவிப்பொறியாளர் மதிவாணன், இளநிலைப்பொறியாளர் பிரித்திவிராஜ் என்.ஆர். காங்., பிரமுகர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை