உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அதிகளவு மது குடித்த முதியவர் இறப்பு

அதிகளவு மது குடித்த முதியவர் இறப்பு

புதுச்சேரி : புதிய பஸ் நிலையத்தில் ஓவராக மது குடித்து கீழே விழுந்த முதியவர் இறந்தார்.உருளையன்பேட்டை அருகே உள்ள தேதாம்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர், கலியமூர்த்தி,64; இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். அதன் பின்னர் அவர் அதிகமாக மது குடித்து விட்டு, புதிய பஸ் நிலையத்தில் சுயநினைவின்றி விழுந்து கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, அவரது மகன் கருணாமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை