புதுச்சேரி, தமிழக மக்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ இனிதே நிறைவு
புதுச்சேரி: புதுச்சேரியில், மாபெரும் திருவிழா போல், நான்கு நாட்களாக மக்களை, ஷாப்பிங் கொண்டாட்டத்தில் ஆழ்த்திய 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நேற்றுடன் இனிதே நிறைவு பெற்றது. 'தினமலர்' நாளிதழ் மற்றும் டார்லிங் நிறுவனம் இணைந்து, 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் -2025' மாபெரும் ஷாப்பிங் கண்காட்சியை, புதுச்சேரி புதிய துறைமுக மைதானத்தில் கடந்த 8ம் தேதி முதல் நான்கு நாட்கள் நடத்தியது. புதுச்சேரி, கடலுார்,விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் கண்காட்சியை பார்வையிட்டு, கை நிறைய பொருட்களோடும், மன நிறைவோடும் திரும்பினர். ஆட்டோ மொபைல் கண்காட்சியில், சொந்த கார் கனவை நனவாக்க சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். வங்கிகள் வழங்கும் கடன் வசதித் திட்டங்கள் குறித்தும் விளக்கங்கள் பெற்றனர். கலக்கல் கலெக் ஷன் திரை விரிப்புகள், சோபா செட், டீ பாய்கள், ஷோகேஸ் வகைகள் என ஏராளமான பொருட்களை வாங்கி, வாகனங்களை வரவழைத்து வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். பல மாநில ஆடை ரகங்கள், ஜன்னல் திரைச் சீலைகள், மகளிர் அழகு சாதன பொருட்கள், ஆபரணங்கள், கைத்தறி சுடிதார்கள், குர்தாக்கள், காட்டன் சேலைகள், காலணிகள், காய்கறி நறுக்கும் கருவிகள், இயற்கை உணவு வகைகள், சணல் பொருட்கள் என, ஒவ்வொரு ஸ்டாலிலும் கூட்டம் அலை மோதியது. தள்ளுபடி மழை கடைசி நாளான நேற்று கண்காட்சிக்காக, சிறப்பு தள்ளுபடி, காம்போ ஆபர், எக்ஸ்சேஞ் ஆபர், பரிசு கூப்பன் என, அள்ளி வழங்கியதால், பெண்கள், கல்லுாரி மாணவிகள், பார்வையாளர்கள் முகங்களில் பரவசம் பொங்கியது. குறிப்பாக வண்ணங்களில் வசீகரிக்கும் சணல் கைப்பை, பொம்மைகள், பர்ஸ், தரை விரிப்பு, காலணி, அணிகலன் போன்றவற்றின் விற்பனை அனல் பறந்தது. இல்லத்தரசிகள், இல்லத்தரசர்கள் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை மனநிறைவுடன் வாங்கி சென்றனர். கிட்ஸ் சோனில் இந்த முறை குட்டீஸ்களின் உற்சாகத்திற்கு வானமே எல்லை. ஆசை தீர விளையாடி மகிழ்ந்தனர். அதை கண்ட பெற்றோர் முகத்தில் பரவசம். புட் கோர்ட்டில் பல மாநிலங்களின் புதுப்புது உணவு வகைகளையும், குடும்பத்துடன் ஒரு கை பார்த்து பரவசப்பட்டனர். ரம்மியமான கூரையின் கீழ் ருசியான உணவுகளை சுவைத்து மகிழ்ந்த குடும்பங்களின் குதுாகலம் பார்ப்பதற்கே அழகாய் இருந்தது. மகளிர் முதல் மழலைகள் வரை எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். மீண்டும் சந்திப்போம் ஒட்டு மொத்தமாக, புதுச்சேரரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி என பல்வேறு மாவட்ட மக்களை கொண்டாட்டத்திலும், கோலாகலத்திலும் மூழ்கடித்த 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ-2025', நேற்று இரவு இனிதே நிறைவு பெற்றது. இன்னும் வித்தியாசமான, புதுமையான அம்சங்கள், இனிமையான சூழல் நிறைந்த மற்றொரு 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ'வில் மீண்டும் சந்திப்போம்.
நன்றி... நன்றி... நன்றி...
திருவிழாபோல் நடந்த 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர் எக்ஸ்போ, கடந்த நான்கு நாட்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. எக்ஸ்போ சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு அளித்த மாவட்ட நிர்வாகம், சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார், புதுச்சேரி நகராட்சி, தீயணைப்பு துறை, குடிமைப்பொருள் வழங்கல் துறை, துறைமுகத்துறை, மீன்வளத்துறை, வனத்துறைஉள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நன்றி. கண்காட்சியை திறந்து வைத்த முதல்வர், சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர்கள் ஆகியோருக்கும், கண்காட்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த எதிர்க்கட்சி தலைவர், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டர் உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளின் அதிகாரிகள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், ஒத்துழைப்பு நல்கிய வம்பா கீரப்பாளையம் மீனவ பஞ்சாயத்தார்களுக்கும் நன்றி. கண்காட்சியில் அரங்கங்கள் அமைத்து சலுகை விலையில் பொருட்கள் வழங்கிய வர்த்தக நிறுவனங்கள், மருத்துவ ஆலோசனை வழங்கிய லட்சுமி நாராயணா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் அனைத்துக்கும் மேலான வாசகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம். கண்காட்சியை இணைந்து வழங்கியோர், வாடிக்கையாளர்கள், விளம்பரதாரர்கள், அரங்க நிர்வாகிகள், ஒலி ஒளி அமைத்தவர்கள், கண்காட்சிக்கு உதவிய நல்ல இதயங்களுக்கும் நன்றி...
இணைந்த கரங்கள்
தினமலர் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியை ருசி பால் நிறுவனம், ஆல்பா பர்னிச்சர், பாண்டி ராம் தங்க நகை மாளிகை, கோவை லட்சுமி கிரைண்டர்ஸ், ரூபா எலக்ட்ரானிக்ஸ், சலானி ஜூவல்லர்ஸ், அஸ்வின் வாட்டர், கிரீன் வாரியர், எஸ்.மீடியா, 92.7 பிக்.எப்.எம்.,